search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வீடுபுகுந்து தாக்குதல் நடத்திய கவுன்சிலரின் கணவர்
    X

    வீடுபுகுந்து தாக்குதல் நடத்திய கவுன்சிலரின் கணவர்

    • வீடு கட்டும்போது எடுத்த மண்ணை இளங்கோவன் வீட்டு அருகே கொட்டினாராம்.
    • இது தொடர்பாக இளங்கோ ரமேசிடம் தகராறு செய்தார்.

    சேலம்:

    சேலம் இளம்பிள்ளை பகுதியை சேர்ந்தவர் ரமேஷ். இவரது பக்கத்து வீட்டை சேர்ந்தவர் இளங்கோவன். இவர்கள் இருவரும் உறவினர்கள். இந்த நிலையில் ரமேஷ் அந்த பகுதியில் வீடு கட்டி வருகிறார்.

    வீடு கட்டும்போது எடுத்த மண்ணை இளங்கோவன் வீட்டு அருகே கொட்டினாராம். இது தொடர்பாக இளங்கோ ரமேசிடம் தகராறு செய்தார். இதில் இளங்கோவுக்கு ஆதரவாக இடங்கனசாலை நகராட்சி தி.மு.க. கவுன்சிலர் விஜயலட்சுமியின் கணவர் குமார் மற்றும் அன்பு ஆகியோர்சென்று ரமேஷின் வீடுபுகுந்து தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் ரமேஷ் விரல்கள் முறிந்து, தலையில் காயங்களுடன் சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுபற்றி மகுடஞ்சாவடி போலீஸ் நிலையத்தில் புகார் செய்யபப்ட்டது. போலீசார் குமார், இளங்கோ, அன்பு ஆகிய 3 பேர் மீதும் 4 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். இதனிடையே இளங்கோ தக்கப்படுவது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×