search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    காயல்பட்டினத்தில் வரலாற்று ஆய்வு மையம்- சப்- கலெக்டர் புகாரி தொடங்கி வைத்தார்
    X

    விழாவில் ராமநாதபுரம் தொகுதி எம்.பி. நவாஸ் கனி பேசிய போது எடுத்த படம்.

    காயல்பட்டினத்தில் வரலாற்று ஆய்வு மையம்- சப்- கலெக்டர் புகாரி தொடங்கி வைத்தார்

    • கலாச்சார கண்காட்சியை செய்யது அப்துல் ரகுமான் தொடங்கி வைத்தார்.
    • வரலாற்று ஆய்வு மையத்தை திருச்செந்தூர் சப்-கலெக்டர் புகாரி தொடங்கி வைத்தார்.

    ஆறுமுகநேரி:

    காயல்பட்டினம் வரலாற்று மையம் தொடக்க விழா மற்றும் காயல் கலாச்சார சங்கம் விழா கற்புடையார் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.

    விழாவிற்கு மர்சூக் தலைமை தாங்கினார். காயல்பட்டினம் நகராட்சி தலைவர் முத்துமுகமது, ஊர் பிரமுகர்கள் தாஜூதீன், முகைதீன் தம்பி, முகைதீன் தம்பிதுரை, அபுல் ஹசன் கலாமி, சம்சுதீன், செய்யது அகமது ஆகியோர் முன்னிலை வகித்தனர். காயல் அமானுல்லா வரவேற்று பேசினார்.

    விழாவில் கலாச்சார கண்காட்சியை செய்யது அப்துல் ரகுமான் தொடங்கி வைத்தார். பின்னர் நடந்த வரலாற்று ஆய்வு மையத்தை திருச்செந்தூர் சப்-கலெக்டர் புகாரி தொடங்கி வைத்தார். முன்னாள் எம்.எல்.ஏ. முகமது அபூபக்கர் வரவேற்று பேசினார். ராமநாதபுரம் தொகுதி எம்.பி. நவாஸ் கனி சிறப்புரையாற்றினார்.

    தொடர்ந்து நடந்த கருத்தரங்கில் உலக தமிழர் வரலாற்று ஆய்வாளர் ஒரிசா பாலு, பேராசிரியர் முகமது நாசர், வரலாற்று ஆய்வாளர் சேயன் இப்ராஹிம், புகாரி ஷரீப் ஆகியோர் பேசினர். வரலாற்று ஆசிரியர் திவான் சிறப்புரையாற்றினார்.

    தொடர்ந்து கலாச்சார கலை நிகழ்ச்சிகளும் நடந்தன. சாலை பசீர், சுல்தான் ஜமாலுதீன், மர்சூக் மவுலானா, காயல் விஷன் ரபீக், சேகு அப்துல் காதர், சேகு அப்துல் காதர் சூபி ஆகியோர் விழாவில் பங்கேற்றனர்.

    முன்னதாக செய்யது முகமது ஜியாது இறைவணக்கம் பாடினார். முடிவில் ஹாமிது பிரார்த்தனை நடத்தினார். அகமது முகைதீன் நன்றி கூறினார். விழாவிற்கான ஏற்பாடுகளை அப்துல் அஜீஸ், மஹ்மூது, சாலிஹ், சம்சுதீன் காமில், மிஸ்பாஹி அன்சாரி, அனீஸ் இப்னு செய்யது உள்பட பலர் செய்திருந்தனர்.

    Next Story
    ×