search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நற்பணி மன்றம் சார்பில் பெண்களுக்கு மங்களப் பொருட்கள்
    X

    நிகழ்ச்சியில் பெண்களுக்கு திருமாங்கல்ய பொருள்கள் வழங்கப்பட்டபோது எடுத்த படம்.

    டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நற்பணி மன்றம் சார்பில் பெண்களுக்கு மங்களப் பொருட்கள்

    • கோவில்பட்டியில் தைப்பொங்கல் திருநாளை முன்னிட்டு மங்கையர்களுக்கு திருமாங்கல்ய பொருள்கள் வழங்கப்பட்டது.
    • பொறியாளர் தவமணி பெண்களுக்கு திருமாங்கல்ய பொருள்கள் மற்றும் சேலைகளை வழங்கினார்.

    கோவில்பட்டி:

    கோவில்பட்டியில் தமிழ்நாடுடாக்டர் சிவந்தி ஆதித்தனார்நற்பணி மன்றம் சார்பில் தைப்பொங்கல் திருநாளை முன்னிட்டு மங்கையர்களுக்கு திருமாங்கல்ய பொருள்கள் வழங்கப்பட்டது.

    கோவில்பட்டி வேலாயுதபுரம் அன்னை ஸ்ரீ பத்ரகாளி காளியம்மன் கோவில் முன்புநடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு மன்றத் தலைவர் முருகன் தலைமை தாங்கினார். மன்ற இணைச் செயலாளர்கள் விஜயலட்சுமி, துர்கேஷ், நளினி ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர் மன்ற உறுப்பினரும் நகர கூட்டுறவு வங்கி இயக்குனருமான லவராஜா குத்துவிளக்கு ஏற்றி வைத்தார். மன்ற நிர்வாகி மகாலட்சுமி வரவேற்று பேசினார். சக்கரை பொங்கலை சண்முகசுந்தரம் பக்தர்களுக்கு வழங்கினார். தூத்துக்குடி மாவட்ட தமிழ்நாடு டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நற்பணி மன்ற துணைத் தலைவரும், நகர்மன்ற உறுப்பினருமான பொறியாளர் தவமணி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு அனைத்து பெண்களுக்கும் திருமாங்கல்ய பொருள்கள் மற்றும் சேலைகளை வழங்கி பேசினார். இந்நிகழ்ச்சியில் நிர்வாகிகள் நாகராஜன், திருச்செந்தூர் பாதயாத்திரை பக்தர்கள் குழு தலைவர் கன்னியம்மாள், லதா மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×