என் மலர்
உள்ளூர் செய்திகள்

சேலத்தில் உள்ள சாலையை சென்னை நெடுஞ்சாலைஆராய்ச்சி நிலைய இயக்குனர் கோதண்டராமன் ஆய்வு செய்தபோது எடுத்த படம்.
சேலத்தில் நெடுஞ்சாலைத்துறை அதிகாரி திடீர் ஆய்வு
சேலம்:
சேலத்தில் உள்ள நெடுஞ்சாலை ஆராய்ச்சி நிலைய மண்டல அலுவலகத்தில் சென்னை நெடுஞ்சாலைஆராய்ச்சி நிலைய இயக்குனர் கோதண்டராமன் ஆய்வு செய்தார், அதன்பிறகு சேலம் வட்டத்திற்கு உட்பட்ட எடப்பாடி, தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி வட்டத்தின் கட்டுப்பாட்டில் உள்ள சாலைகளின் தரத்தை ஆய்வு செய்ய உள்ளார். இதன் முதற்கட்டமாக சேலம் கட்டுமானம் மற்றும் பராமரிப்பு கோட்டத்திற்குட்பட்ட மாவட்ட இதர சாலையான கீரை பாப்பம்பாடி சாலையில் ஆய்வு செய்தார்.
அப்பொழுது சேலம் நெடுஞ்சாலை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு வட்ட கண்காணிப்பு பொறி–யாளர் சுரேஷ், கோட்ட பொறியாளர் துரை, உதவி கோட்ட பொறியாளர் சந்தோஷ்குமார், சேலம் நெடுஞ்சாலை தரக்–கட்டுப்பாடு கோட்ட பொறி–யாளர் முருகன், உதவி கோட்ட பொறியாளர் கோதை மற்றும் உதவி பொறியாளர்கள், ஊழியர்கள் உட்பட பலர் உடனிருந்தனர்.