என் மலர்
உள்ளூர் செய்திகள்

சங்ககிரியில் ஹெல்மட் விழிப்புணர்வு பேரணி
- சேலம் மாவட்டம், சங்ககிரி யில் ஹெல்மட் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
- சங்ககிரி ஆர்.டி.ஓ சவுமியா மற்றும் டி.எஸ்.பி ஆரோக்கி யராஜ் ஆகியோர் பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.
சங்ககிரி:
சேலம் மாவட்டம், சங்ககிரி யில் ஹெல்மட் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. சங்ககிரி ஆர்.டி.ஓ சவுமியா மற்றும் டி.எஸ்.பி ஆரோக்கி யராஜ் ஆகியோர் பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தனர். பேரணியில், தன்னார்வலர்கள் மற்றும் போலீசார் ஹெல்மட் அணிந்து இரு சக்கர வாக னத்தில் ஊர்வலமாக சென்ற னர்.
சங்ககிரி ஆர்.டி.ஓ அலு வல கத்தில் தொடங்கிய பேரணி புதிய எடப்பாடி சாலை வழியாக பழைய பஸ் நிலையம் சென்று கோட்டாட்சி யர் அலுவல கத்தில் முடி வுற்றது. இதில், கல்லுாரி மாணவிகள், சங்ககிரி போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் தேவி, தினகரன் (போக்கு வரத்து), மோட்டார் வாகன ஆய்வாளர் புஷ்பா, செந்தில், வருவாய் துறை ஆய்வாளர் கீதா, வி.ஏ.ஓ. சதீஷ் பிரபு மற்றும் அமுதசுடர் அறக்கட்டளை மாணிக்கம், சத்திய பிரகாஷ், தண்ணீர் அமைப்பு அறக்கட்டளை சண்முகம், ரோட்டரி கிளப் திவாகர், பி.எஸ்.சி கல்லூரி முதல்வர் ரேவதி உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டு விழிப்புணர்வு பதாகைகளை கையில் பிடித்த வாறு ஊர்வலமாக சென்றனர்.






