search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மண் சரிவால் போக்குவரத்து கடும் பாதிப்பு
    X

    கொடைக்கானலில் ஆலங்கட்டி மழை பெய்த காட்சி.


    மண் சரிவால் போக்குவரத்து கடும் பாதிப்பு

    • கொடைக்கானலில் 7 செ.மீ மழை மண் சரிவால் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
    • 7 செ.மீ மழையினால் மண் சரிவினால் போக்குவரத்து கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

    கொடைக்கானல்:

    கொடைக்கானலில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. நேற்று மதியம் 2 மணிக்கு இடி-மின்னலுடன் ஆலங்கட்டி மழை பெய்தது.

    விட்டு விட்டு சுமார் 2 மணி நேரம் பெய்த மழையால் நகரின் தாழ்வான பகுதியில் மழை நீர் வெள்ளம் போல் ஓடியது. லாஸ்காட் ரோடு, உகார்த்தேநகர், செண்பகனூர் உள்ளிட்ட இடங்களில் மண் சரிவு ஏற்பட்டது.

    உடனடியாக ஜே.சி.பி. எந்திரம் வரவழைக்க–ப்பட்டு மண் சரிவு சீரமைக்கப்பட்டது.தொடர் மழை காரணமாக வெள்ளிநீர்வீழ்ச்சி, பாம்பார் அருவி, பியர் சோழா உள்ளிட்ட அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. கன மழை காரணமாக கொடைக்கானல் நகருக்கு குடிநீர் வழங்கும் அணைகளில் நீர் வரத்து அதிகரித்துள்ளது

    மேலும் பழனியில் உள்ள அணைகளுக்கும் தொடர்ந்து நீர் வரத்து அதிகரித்த வண்ணம் உள்ளது. தென்மேற்கு பருவமழை காரணமாக மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களில் மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் கொடைக்கானலில் மட்டுமே தொடர்ந்து மழை பெய்து வருகிறது. நேற்று கொடைக்கானலில் 16, போர்ட் கிளப் 54 மி.மீ மழை அளவு பதிவானது. சராசரியாக கொடைக்கானலில் மட்டும் 7 செ.மீ மழை பதிவாகியுள்ளது.


    Next Story
    ×