search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தாளவாடி-தம்பம் வனப்பகுதியில் கடும் பனி பொழிவு- முகப்பு விளக்குகளை எரியவிட்டு செல்லும் வாகன ஓட்டிகள்
    X

    முகப்பு விளக்குகளை எரிய விட்டு சென்ற வாகன ஓட்டிகளை படத்தில் காணலாம்.

    தாளவாடி-தம்பம் வனப்பகுதியில் கடும் பனி பொழிவு- முகப்பு விளக்குகளை எரியவிட்டு செல்லும் வாகன ஓட்டிகள்

    • தினமும் சரக்கு வாகனங்கள், பஸ், லாரி, இரு சக்கர வாகனங்கள் என ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன.
    • வேலைக்கு செல்லும் விவசாயிகள் கடும் அவதி அடைந்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த தாளவாடி மலைப்பகுதி அடர்ந்த வனப்பகுதியாகும். இந்த வனப்பகுதியை சுற்றி தலமலை, திம்பம், ஆசனூர் உள்பட பல்வேறு வன கிராமங்கள் உள்ளன. இந்த பகுதிகளில் பொதுமக்கள் பலர் வசித்து வருகிறார்கள். மேலும் பலர் விவசாய பணிகளிலும் ஈடுபட்டு வருகிறார்கள்.

    இதனால் திம்பம், தாளவாடி மற்றும் பண்ணாரி வனப்பகுதி எப்போதும் பசுமையாகவே இருந்து வருகிறது. மேலும் அடர்ந்த வனப்பகுதி என்பதால் இங்கு ஜில்லென குளிர்ந்த காற்று வீசி கொண்டே இருக்கும். மேலும் அதிகாலை நேரங்களில் பனி பெய்து கொண்டே இருக்கும்.

    இந்த வனப்பகுதியில் மைசூர் தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ளது. இந்த வழியாக தினமும் சரக்கு வாகனங்கள், பஸ், லாரி, இரு சக்கர வாகனங்கள் என ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. சத்தி மற்றும் சுற்று வட்டார மலை கிராம பகுதிகளில் காலை நேரத்தில் வெயில் அடித்தாலும் நள்ளிரவு 12 மணிக்கு மேல் பனி பொழிவு இருந்து வருகிறது.

    இந்த நிலையில் கடந்த சில நாட்களாக திம்பம் மற்றும் தாளவாடி வனப்பகுதிகளில் பகல் நேரங்களில் வெயில் அடிக்கிறது. அதே போல் இரவு நேரங்களில் பனி பொழிவும் இருந்து வருகிறது. இந்நிலையில் இன்று அதிகாலை தாளவாடி, திம்பம், தலமலை உள்ளிட்ட பகுதிகளில் அதிகளவு பனி பொழிவு இருந்தது.

    இதனால் இந்த பகுதி முழுவதும் பனி துளிகள் படர்ந்து பசுமையாக காட்சி அளித்தது. மேலும் இந்த பகுதியில் குளிர்ந்த காற்று வீசி வருவதால் அதிகாலை நேரங்களில் வேலைக்கு செல்லும் மலை கிராம பொதுமக்கள் ஸ்சுவட்டர் மற்றும் குல்லா அணிந்த படியே சென்று வருகிறார்கள்.

    மேலும் பனி பொழிவு காரணமாக இன்று காலை வரை வனப்பகுதி சாலைகள் இருட்டாகவே காணப்பட்டது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் இன்று அதிகாலை மற்றும் காலை நேரத்திலும் முகப்பு விள க்குகளை எரியவிட்டப்ப டியே சென்றனர். மேலும் அதிகாலை நேரத்தில் வேலைக்கு செல்லும் விவசாயிகள் கடும் அவதி அடைந்தனர்.

    Next Story
    ×