search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சேலம் மாவட்டத்தில் இடி, மின்னலுடன் கன மழை
    X

    சேலம் மாவட்டத்தில் இடி, மின்னலுடன் கன மழை

    சேலம் மாவட்டத்தில் இடி, மின்னலுடன் கன மழை பெய்ததது.

    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக காலையில் கடும் வெயில் நிலவுகிறது. மாலையில் கன மழை பெய்து வருகிறது. நேற்று வழக்கம்போல காலையில் வெயில் வாட்டியது.

    மாலையில் வானில் கரு மேகங்கள் சூழ்ந்தன. பின்னர் கன மழை கொட்டியது. சில இடங்களில் இடி, மின்னலுடன் மழை பெய்தது. குறிப்பாக பெத்தநாயக்கன்பாளையம், ஆத்தூர், எடப்பாடி, ஏற்காடு ஆகிய பகுதிகளில் கன மழை பெய்தது.

    அதிகபட்சமாக 45.5 மி.மீ பதிவு

    மாவட்டத்தில் அதிகபட்சமாக பெத்த–நாயக்கன்–பாளையத்தில் 45.5 மி.மீ. மழையும், ஏற்காட்டில் 45.2 மி.மீ மழையும் பதிவாகி உள்ளது. மாவட்டத்தின் மற்ற பகுதிகளில் பெய்த மழை அளவு மில்லிமீட்டரில் வருமாறு:-

    எடப்பாடி- 35.4, கரியகோவில்-18, ஆத்தூர்-10.8, தம்மம்பட்டி-10, வீரகனூர்-5, மேட்டூர்-4.2, காடையாம்பட்டி-2.5, சேலம்-1.

    மாவட்டம் முழுவதும் நேற்று ஒரே நாளில் 181.6 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது. இதன் சராசரி 12.10 ஆகும்.

    தொடர் மழை காரணமாக வாழப்பாடி தாலுகாவில் அமைந்துள்ள ஆனைமடுவு அணை நீர்மட்டம் 44.52 அடியாகவும், பெத்தநாயக்–கன்பாளையம் தாலுகாவில் உள்ள கரியகோவில் அணை நீர்மட்டம் 44.75 அடியாகவும் உயர்ந்து உள்ளது.

    Next Story
    ×