search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நள்ளிரவு முதல் சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மழை
    X

    நள்ளிரவு முதல் சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மழை

    • சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்தது.
    • அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

    சென்னை:

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடிமின்னலுடன் கூடிய லேசான மற்றும் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்திருந்தது.

    இந்நிலையில், சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நள்ளிரவு முதலே இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்து வருகிறது.

    அரும்பாக்கம், கோயம்பேடு, முகப்பேர், மதுரவாயல், நுங்கம்பாக்கம், அண்ணாநகர் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்தது.

    Next Story
    ×