search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    முன்னாள் மாணவியின் குற்றச்சாட்டு தவறானது- ஹரிபத்மனின் மனைவி போலீசில் பரபரப்பு புகார்
    X

    முன்னாள் மாணவியின் குற்றச்சாட்டு தவறானது- ஹரிபத்மனின் மனைவி போலீசில் பரபரப்பு புகார்

    • ஹரிபத்மனின் மனைவி திவ்யா, சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் கோரிக்கை மனு ஒன்றை கொடுத்துள்ளார்.
    • புகார் கொடுத்த குறிப்பிட்ட மாணவி, 2019-ம் ஆண்டு கல்லூரியில் இருந்து வெளியேறும் முன்பு எனது மகளின் பிறந்தநாள் விழாவில் பங்கேற்றார்.

    சென்னை:

    சென்னை கலாஷேத்ரா நடன கல்லூரி பேராசிரியர் ஹரிபத்மன், முன்னாள் மாணவி கொடுத்த பாலியல் புகார் அடிப்படையில் கைது செய்யப்பட்டு, நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் ஹரிபத்மனின் மனைவி திவ்யா, சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் கோரிக்கை மனு ஒன்றை நேற்று கொடுத்துள்ளார்.

    அந்த மனு அடையாறு அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அந்த மனுவில் கூறி இருப்பதாவது:-

    நானும், எனது கணவர் வேலை பார்த்த அதே கலாஷேத்ரா கல்லூரியில் தான் வேலை பார்க்கிறேன். எனது கணவர் எந்த தவறும் செய்யவில்லை. என் கணவர் மீதான காழ்ப்புணர்ச்சி காரணமாக, 2 பேராசிரியைகளின் தூண்டுதலின் பேரில், அந்த மாணவி புகார் கொடுத்துள்ளார். தவறான அந்த புகார் மனு மீது ஒரு பெண் போலீஸ் அதிகாரியை நியமித்து நேர்மையான முறையில் விசாரணை நடத்த வேண்டும். குறிப்பிட்ட முன்னாள் மாணவி பொய்யான புகாரை என் கணவர் மீது கொடுத்துள்ளார்.

    புகார் கொடுத்த குறிப்பிட்ட மாணவி, 2019-ம் ஆண்டு கல்லூரியில் இருந்து வெளியேறும் முன்பு எனது மகளின் பிறந்தநாள் விழாவில் பங்கேற்றார். எனவேதான் தூண்டுதலின்பேரில் அந்த மாணவி தற்போது புகார் கொடுத்துள்ளார், என்று குற்றம் சாட்டுகிறேன். பொய்யான புகார் கொடுத்த முன்னாள் மாணவி மீதும், அந்த மாணவியை தூண்டிவிட்ட 2 பேராசிரியைகள் மீதும் உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும். என் கணவர் மீதான வழக்கை சட்டப்படி அவர் சந்திப்பார்.

    இவ்வாறு அந்த புகார் மனுவில் திவ்யா தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×