என் மலர்
உள்ளூர் செய்திகள்

ரூ.34 லட்சம் மதிப்புள்ள குட்கா கடத்தியவர் கைது
- வாகனத்தை சோதனையிட்ட போது அதில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட 3 1/2 குட்கா இருப்பது தெரியவந்தது.
- இதன் மதிப்பு 34 லட்சம் ரூபாய் என தெரியவந்தது.
காவேரிப்பட்டணம்,
கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் அடுத்த சேலம் தேசிய நெடுஞ்சாலையில் பொம்மசமுத்திரம் அருகே நேற்று காவேரிப்பட்டணம் போலீசார் சப்-இன்ஸ்பெக்டர் பால கிருஷ்ணன், பழனியப்பன், சரவணன், குமரேசன், ராமகிருஷ்ணன் உள்ளிட்ட காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்பொழுது அங்கு சந்தேகத்திடமான முறையில் வந்த வாகனத்தை சோதனையிட்ட போது அதில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட 3 1/2 குட்கா இருப்பது தெரியவந்தது. இதன் மதிப்பு 34 லட்சம் ரூபாய் என தெரியவந்தது.
உடனடியாக காவேரிப்பட்டணம் போலீசார் வாகனத்தை பறிமுதல் செய்தனர். அந்த வாகனத்தை ஓட்டி வந்த திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் அடுத்த ஸ்ரீவள்ளூர் ஊரை சார்ந்த கணேஷை கைது செய்தனர்.
விசாரித்தபோது குட்காவை பெங்களூரில் இருந்து கடத்தி கேரளாவுக்கு கொண்டு செல்வது கண்டுபிடிக்கப்பட்டது.
Next Story






