என் மலர்
உள்ளூர் செய்திகள்

விழாவில் கலந்து கொண்ட பக்தர்களை படத்தில் காணலாம்.
மயான கொள்ளை திருவிழா
- சிவராத்திரியை முன்னிட்டு மயான கொள்ளை திருவிழா நடைபெற்றது.
- ஆடு கோழிகளை கடித்து ரத்தம் குடிக்கும் நிகழ்வு நடைபெற்றது.
பாப்பாரப்பட்டி,
தருமபுரி மாவட்டம், அ.பாப்பாரப்பட்டி அங்காளம்மன் கோவிலில் மகா சிவராத்திரியை முன்னிட்டு மயான கொள்ளை திருவிழா நடைபெற்றது.
நேற்று முன்தினம் (ஞாயிற்றுக்கிழமை) சாமி கல்யாணம் நடைபெற்றது.
கல்யாண கோலத்தில் அம்மன் திருவீதி உலா நடைபெற்றது. பிள்ளைப்பாவ் சுற்றுதல் நடைபெற்றது. பக்தர்கள் தீச்சட்டி ஏந்தியும் அலகு குத்தியும் ஊர்வலமாக வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
அம்மன் மயானத்துக்கு சென்று மயான கொள்ளை திருவிழா நடைபெற்றது. திருவிழாவில் கோவில் முன்பு 14 நாட்கள் தினசரி இரவு கோபால்சாமி நாடகக்குழுவினரின் தெருக்கூத்து நடைபெற்றது.
விழாவில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்க ப்பட்டது. நாளை தீமிதி விழாவும், வியாழக்கிழமை பிச்சாண்டவர் கோலத்தில் அம்மன் வீதியுலா நடைபெறும்.
வெள்ளிக்கிழமை கும்ப பூஜையுடன் விழா நிறைவு பெறுகிறது. விழா ஏற்பாடுகளை விழாக் குழுவினர் மற்றும் ஊர்பொதுமக்கள் செய்துள்ளனர்.
இதேபோல் பிக்கிலி ரைஸ்மில் அருகில் உள்ள அங்காளம்மன் கோவிலில் நடைபெற்ற மயான கொள்ளை திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் அலகு குத்தியும் தீச்சட்டி ஏந்தியும் ஊர்வலமாக சென்றனர்.
பின்னர் பிக்கிலி மயானத்தில் நடைபெற்ற மயான கொள்ளை விழாவில் அம்மன் அருள் வந்து ஆடு கோழிகளை கடித்து ரத்தம் குடிக்கும் நிகழ்வு நடைபெற்றது.
சாமி கல்யாணம் மற்றும் அம்மன் வீதியுலா நடைபெற்றது. இதில் ஏராள மான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி குமபிட்டனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.