என் மலர்
உள்ளூர் செய்திகள்

589 கிராம ஊராட்சிகளிலும் நாளை கிராம சபை கூட்டம்
- காந்தி ஜெயந்தியை முன்னிட்டு கிராம சபை கூட்டம் நடைபெற உள்ளது.
- பொதுமக்களுடன் அனைத்து துறை அலுவலர்களும் பங்கேற்று விவாதிக்க உள்ளனர்.
தஞ்சாவூர்:
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள 589 கிராம ஊராட்சிகளிலும் நாளை (திங்கள்கிழமை) காந்தி ஜெயந்தியை முன்னிட்டு கிராம சபை கூட்டம் நடைபெற உள்ளது. காலை 11 மணிக்கு தொடங்கும் இந்த கூட்டத்தில் கிராம ஊராட்சிகளின் வளர்ச்சி திட்டங்கள் குறித்து பொதுமக்களுடன் அனைத்து துறை அலுவலர்களும் பங்கேற்று விவாதிக்க உள்ளனர்.
எனவே கிராம சபை கூட்டத்திற்கு மாவட்டத்தின் கிராம ஊராட்சி பகுதியில் உள்ள பொதுமக்கள் அனைவரும் பங்கேற்று சிறப்பித்திட வேண்டும் என்று மாவட்ட கலெக்டர் தீபக்ஜேக்கப் தெரிவித்துள்ளார்.
Next Story






