search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    போடி அருகே பட்டதாரி வாலிபர் தற்கொலை
    X

    கோப்பு படம்

    போடி அருகே பட்டதாரி வாலிபர் தற்கொலை

    குடும்ப பிரச்சினையில் என்ஜினீயரிங் பட்டதாரி வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்

    மேலசொக்கநாதபுரம் :

    போடி அருகே தருமத்துப்பட்டியை சேர்ந்தவர் கண்ணன் மகன் சூர்யா(23). என்ஜினீயரிங் பட்டதாரியான இவர் வெளியூர் சென்று வேலை பார்க்க வேண்டும் என தனது தந்தையிடம் கூறியுள்ளார். ஆனால் அவர் சொந்த ஊரிலேயே தொழில் செய்ய வேண்டும் என்றும், வெளியூர் செல்ல கூடாது என்றும் கூறியுள்ளார்.

    இதனால் மனமுடைந்த சூர்யா விஷமாத்திரை தின்று மயங்கினார். தேனி க.விலக்கு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து போடி தாலுகா போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    உத்தமபாளையம் அருகே சுருளிபட்டியை சேர்ந்தவர் ராமர்(65). இவர் கடந்த சில நாட்களாக வீட்டில் தங்காமல் வீதிகளிலேயே சுற்றி வந்துள்ளார். இந்த நிலையில் பெரியாற்று பாலத்தில் உடல்நிலை பாதிக்கப்பட்டு கிடந்தார். அக்கம்பக்கத்தினர் மீட்டு தேனி க.விலக்கு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து உத்தமபாளையம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    Next Story
    ×