search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வருகிற 4-ந் தேதி நடக்கிறது அண்ணாமலை பல்கலைக்கழக பட்டமளி்ப்பு விழாவில் கவர்னர் ஆர்.என்.ரவி பங்கேற்பு
    X

    வருகிற 4-ந் தேதி நடக்கிறது அண்ணாமலை பல்கலைக்கழக பட்டமளி்ப்பு விழாவில் கவர்னர் ஆர்.என்.ரவி பங்கேற்பு

    • 4-ந் தேதி மாலை 5 மணிக்கு நடைபெறுகிறது.
    • மாணவியர்களுக்கு பட்டங்களை வழங்கி பேசுகிறார்.

    கடலூர்:

    சிதம்பரம் அண்ணா மலைப் பல்கலைக்கழக 85-வது பட்டமளிப்பு விழா, பல்கலைக்கழக சாஸ்திரி அரங்கில் வருகிற 4-ந் தேதி மாலை 5 மணிக்கு நடை பெறுகிறது. விழாவிற்கு பல்கலைக் கழக வேந்தரும், தமிழ்நாடு கவர்னருமான ஆர்.என்.ரவி தலைமை வகித்து மாணவ, மாணவியர்களுக்கு பட்டங்களை வழங்கி பேசுகிறார்.

    இதில் தமிழ்நாடு உயர் கல்வித்துறை அமைச்சரும், பல்கலை. இணைவேந்தரு மான பொன்முடி பங்கேற்று பேசுகிறார். மேலும், இஸ்ரோ ஆராய்ச்சி மைய சந்திராயன்-3 திட்ட இயக்குநர் வீரமுத்துவேல் பட்டமளிப்பு விழா உரை யாற்றுகிறார். விழாவில் அண்ணாமலை பல்கலைக்கழக துணை வேந்தர் ராம.கதிரேசன், பதி வாளர் சிங்காரவேல் மற்றும் சிண்டிகேட் உறுப்பி னர்கள், புல முதல்வர்கள் உள்ளிட் டோர் பங்கேற்கின்றனர்.

    Next Story
    ×