search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    உளுந்தூர்பேட்டை அருகே டிரெய்லர் லாரி மீது மோதிய அரசு சொகுசு பஸ்: உடல் நசுங்கி டிரைவர் பலி
    X

    விபத்துக்குள்ளான பஸ்.

    உளுந்தூர்பேட்டை அருகே டிரெய்லர் லாரி மீது மோதிய அரசு சொகுசு பஸ்: உடல் நசுங்கி டிரைவர் பலி

    • டிரெய்லர் லாரியில் இருந்த இரும்பு தகடு சரிந்து பஸ் டிரைவர் மீது விழுந்தது.
    • சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    கள்ளக்குறிச்சி:

    சென்னையில் கமுதிக்கு 46 பயணிகளை ஏற்றிக்கொண்டு அரசு விரைவு சொகுசு பஸ் நேற்று இரவு புறப்பட்டது. இந்த பஸ்சினை திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகேயுள்ள என்குன்றத்தைச் சேர்ந்த பிரபாகரன் (வயது 54) என்பவர் ஓட்டி வந்தார். இந்த பஸ் இன்று அதிகாலை 4 மணியளவில் உளுந்தூர்பேட்டைக்கு வந்தது. உளுந்தூர்பேட்டை அடுத்த ஆசனூரில் உள்ள சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அரசு விரைவு சொகுசு பஸ் சென்ற போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ், முன்னாள் சென்ற டிரெய்லர் லாரியின் பின்புறம் மோதியது. டிரெய்லர் லாரியில் இருந்த இரும்பு தகடு சரிந்து பஸ் டிரைவர் மீது விழுந்தது.

    இதில் டிரைவர் பிரபாகரன் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார். தகவல் அறிந்த எடக்கல் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். உடல் நசுங்கி இறந்து கிடந்த டிரைவரை மீட்க தீயணைப்பு துறையினரை வரவழைத்தனர். அவர்கள் சுமார் ஒரு மணி நேரம் போராடி டிரைவரின் உடலை பஸ்சிலிருந்து மீட்டனர். தொடர்ந்து டிரைவரின் உடல் பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்தி ரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மேலும், பஸ்சில் பயணம் செய்த பயணிகள் 5-க்கும் மேற்ப ட்டோருக்கு லேசான காய ங்களுடன் உயிர் தப்பினர். இவர்களுக்கு உளுந்தூ ர்பேட்டை அரசு ஆஸ்ப த்தி ரியில் முத லுதவி சிகி ச்சை அளி க்கப்ப ட்டது. தொடர்ந்து மாற்றுப் பஸ் வரவழை க்கப்பட்டு பயணிகள் அனுப்பி வைக்க ப்ப ட்டனர். இந்த விபத்தால் உளுந்தூ ர்பேட்டை சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 2 மணி நேரம் பக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    Next Story
    ×