search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    காரமடை நகராட்சியில் அரசு நிலங்களை மீட்டு விளையாட்டு மைதானம்- பூங்கா அமைக்க வேண்டும்
    X

    காரமடை நகராட்சியில் அரசு நிலங்களை மீட்டு விளையாட்டு மைதானம்- பூங்கா அமைக்க வேண்டும்

    • காரமடை நகராட்சி மன்ற மாதாந்திர கூட்டம் நடைபெற்றது
    • நகராட்சியில் உள்ள பகுதிகளில் அரசு நிலங்களை பலர் ஆக்கிரமித்துள்ளனர்.

    மேட்டுப்பாளையம்

    காரமடை நகராட்சி மன்ற மாதாந்திர கூட்டம் நடைபெற்றது. நகர் மன்ற தலைவர் உஷா வெங்கடேஸ் தலைமை தாங்கினார்.

    கூட்டத்தில் ஆணையாளர் பால்ராஜ், துணைத்தலைவர் மல்லிகா ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் வார்டு உறுப்பினர்கள் மற்றும் நகராட்சி அதிகாரிகள் பங்கேற்றனர்.

    கூட்டத்தில் நடந்த விவாதங்கள் பின்வருமாறு:

    ராம்குட்டி (திமுக): நகராட்சியில் உள்ள பகுதிகளில் அரசு நிலங்களை பலர் ஆக்கிரமித்துள்ளனர்.

    இதனை ஆய்வு செய்து தற்போதுள்ள நகராட்சிக்கு சொந்தமான இடங்களை வேலிகள் அமைத்து அந்த இடங்களில் அப்பகுதி மக்களுக்கு விளையாட்டு மைதானம் மற்றும் பூங்கா, அடிப்படை வசதிகளை பூர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    சித்ரா(திமுக): எனது வார்டுக்குட்பட்ட பகுதியில் ெரயில்வே மேம்பாலத்திற்கு அடியில் சப்வே உள்ளது. அங்கு வாகனம் சென்று வர முடியாத நிலையில் கழிவுநீர் தேங்கி உள்ளதால் அப்பகுதியிலுள்ள மக்களுக்கு பல்வேறு சர்ம வியாதிகள் ஏற்பட்டு வருகிறது. இதனை அப்புறப்படுத்த நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    கவிதா (மதிமுக): எனது வார்டுக்குட்பட்ட பகுதியில் தெருவிளக்கு, குடிநீர்குழாய் சீரமைப்பு, உள்ளிட்ட பணிகளை செய்து தரக்கோரி கடந்த 7 மாத காலமாக கூறி வருகிறேன். இதுகுறித்து சம்மந்தப்பட்ட நகராட்சி அதிகாரிகளுக்கு தெரிவித்தும் மெத்தன போக்காக உள்ளன. பெயரளவிற்கு கூட யாரும் வந்து பார்த்தது இல்லை. மேலும் வளர்ச்சி பணிகளை மேற்கொள்ள ஒப்பந்ததாரர்கள் பணிகள் எடுத்தும் எந்த பணிகளும் மேற்கொள்ளவில்லை. தவறும் பட்சத்தில் எனது வார்டுக்குட்பட்ட பொதுமக்களை திரட்டி நகராட்சி அலுவலகம் முன்பு போராட்டம் நடத்தப்படுவதாக தெரிவித்தார்.

    மஞ்சுளா(திமுக): அரங்கநாதர் கோவிலில் வாரந்தோறும் வெளியூர் பக்தர்கள் வந்து செல்கின்றனர். அன்று மட்டும் கூடுதலாக தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    27 வார்டு வனிதா (அதிமுக): எனது வார்டுக்குட்பட்ட ஆர்.வி நகர் பகுதியில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளது. இப்பகுதியில் கழிவுநீர் செல்ல போதிய வடிகால் கால்வாய் அமைக்காததால் குளம் போன்று கழிவுநீர் தேங்கி உள்ளது. இதனால் இப்பகுதி மக்களுக்கு பல்வேறு சரும நோய்கள் ஏற்பட்டு வருகிறது. எனவே கழிவுநீர் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    மேலும் எனது வார்டுக்குட்பட்ட பகுதிகளில் உள்ள குடிநீர் குழாய்கள் சேதமடைந்ததால் பழுதுநீக்க நகராட்சி நிர்வாகத்திற்கு தெரிவித்தால் ஊழியர்கள் ரசீது இருந்தால் மட்டுமே குழாய்களை பழுது பார்க்க முடியும் என கூறி வருகின்றனர். இதனை நகராட்சி நிர்வாகம் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    விக்னேஷ்(பாஜக): காரமடை நகராட்சி பகுதிகளில் ஆக்கிரமிப்புகள் அதிகமாக உள்ளது. சாலையோரம் மற்றும் நடை பாதைகளில் ஆக்கிரமிப்பு செய்து வருகின்றனர். இதனை உடனடியாக நகராட்சி நிர்வாகம் அளவீடு செய்து ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்.

    ஆணையாளர் பால்ராஜ்: குடிநீர் தெருவிளக்கு சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை பூர்த்தி செய்ய, ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். ரயில்வே மேம்பாலம் சப்வே பகுதியில் ரயில்வே கட்டுப்பாட்டு துறையில் உள்ளதால் அதனை அகற்ற ெரயில்வே மூலம் டெண்டர் விடப்பட்டுள்ளது என்றார்.

    Next Story
    ×