search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அரசு பொது தேர்வு முடிவுகள் விழுப்புரம் சரஸ்வதி மெட்ரிக் பள்ளி மாணவ- மாணவிகள் சாதனை
    X

    அரசு பொது தேர்வில் சாதனை படைத்த மாணவிகளை படத்தில் காணலாம்.

    அரசு பொது தேர்வு முடிவுகள் விழுப்புரம் சரஸ்வதி மெட்ரிக் பள்ளி மாணவ- மாணவிகள் சாதனை

    அரசு பொது தேர்வு முடிவுகள் விழுப்புரம் சரஸ்வதி மெட்ரிக் பள்ளி மாணவ- மாணவிகள் சாதனை படைத்துள்ளனர்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் திரு.வி.க. வீதியில் சரஸ்வதி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி உள்ளது. தற்போது வெளியான பிளஸ்-2 தேர்வில் மாணவி சரஸ்வதி 594 மதிப்பெண் பெற்று முதல் இடத்ைத பிடித்து உள்ளார். 2-ம், இடத்தை மாணவி அபிநயா, 3-ம் இடத்தை மாணவன் ரேஷிநாத், 4-ம் இடத்தை மாணவி பிரிய வர்தனா (583/600), 5-ம் இடத்தில் மாணவன் வாஞ்சிநாதன் (582/600) மதிப்பெண்களை பெற்று சாதனை படைத்து உள்ளனர். 10-ம் வகுப்பு பொது தேர்வில் அதிகபட்சம் மதிப்பெண்களை பெற்ற மாணவி ஐஸ்வர்யா (495/500) முதல் இடத்தையும், இரண்டாம் இடத்தில்மாணவி அம்ரூதா (481/500), மூன்றாம் இடத்தில் மாணவி ஜெயவர்ஷினி (476/500), நான்காம் இடத்தில் மாணவி இவாஞ்சிலின் மோனிக்கா (475/500), ஐந்தாம் இடத்தில் மாணவி தாரணி (473/500), லாவண்யா (473/500) மதிப்பெண்களை பெற்று சாதனை படைத்து உள்ளனர்.

    சாதனை படைத்த மாணவ- மாணவிகளை பள்ளியின்சேர்மன் டாக்டர் எஸ். ரவீந்திரன், பொருளாளர் எம். சிதம்பரநாதன், மேளான் டிரஸ்டி ஜி. முத்து சரவணன் ,தாளாளர் எம்.ராஜசேகரன், பள்ளியின்முதல்வர்ஆர். யமுனாராணி, துணை முதல்வர் எம்.சாந்தி, ஆசிரியர்கள்,ஊழியர்கள் அனைவரும் பெற்றோர்களுக்கும் மாணவர்களுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டார்கள்.மேலும் இந்த கல்வி ஆண்டில்மாணவ/ மாணவியர்கள் மேற்படிப்பிற்கான அனைத்து விதமான நுழைவுதேர்வுகளையும் எதிர்கெள்ளும் வகையில் பள்ளியின் முதல்வர் மற்றும்ஆசிரியர்கள் திறன்படசெயல்படுவதாக தாளாளர்தெரிவித்துள்ளர்.

    Next Story
    ×