search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விழுப்புரம் அருகே மாரடைப்பால் அரசு பணியாளர் சாவு
    X

    விழுப்புரம் அருகே மாரடைப்பால் அரசு பணியாளர் சாவு

    • வேல்முருகன் விழுப்புரத்தில் உள்ள அரசு போக்குவரத்து கழகத்தில் ஊழியராக பணிபுரிந்து வந்தார்.
    • காலை வேல்முருகனுக்கு திடீரென்று நெஞ்சு வலி ஏற்பட்டது.

    விழுப்புரம்:

    விழுப்புரம் அரசு போக்குவரத்து கழக போக்குவரத்து குடியிருப்பைச் சேர்ந்தவர் வேல்முருகன் (வயது 50) இவர் விழுப்புரத்தில் உள்ள அரசு போக்குவரத்து கழகத்தில் ஊழியராக பணிபுரிந்து வந்தார். வழக்கம்போல் நேற்று பணி முடிந்து இரவு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். இந்நிலையில் இன்று காலை வேல்முருகனுக்கு திடீரென்று நெஞ்சு வலி ஏற்பட்டது. இதனால் வலி தாங்காமல் வேலுமுருகன் அலறினார்.

    இவரது அலறல் சத்தம் கேட்டு வீட்டில் இருந்தவர்கள் மற்றும் அக்கம் பக்கம் இருந்தவர்கள் இவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியில் ஆம்புலன்சில் வேல்முருகன் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த விழுப்புரம் தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×