என் மலர்
உள்ளூர் செய்திகள்

வீட்டின் பூட்டை உடைத்து 7 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகள் கொள்ளை
- இரண்டு அறைகளில் இருந்த மூன்று பீரோக்கள் உடைக்கப்பட்டு தங்க நகைகள் கொள்ளை
- கைரேகை நிபுணர்கள் மற்றும் தாலுகா காவல்துறையினர் வந்து ஆய்வு செய்தனர்.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் அடுத்த பொன்னேரி கரை பகுதியில் ஓய்வு பெற்ற போக்குவரத்து தொழிலாளர்களின் குடியிருப்பு, சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி உள்ளது. இந்த குடியிருப்பில் 104 வீடுகள் உள்ளன. இந்த குடியிருப்பில் உள்ள ஒரு வீட்டில், ஓய்வு பெற்ற போக்குவரத்து தொழிலாளர் சொக்கலிங்கம் என்பவரின் மகன் சதீஷ் என்பவர் தனது மனைவியுடன் வசித்து வருகிறார். அவரது மனைவி பிரவசத்துக்காக சென்னை சென்று உள்ளார்.
இந்நிலையில் தனியார் நிறுவனத்தில் வேலை செய்யும் சதீஷ் ஷிப்ட் முடிந்து நேற்று நள்ளிரவு வீட்டுக்கு வந்த பார்த்தபோது வீட்டின் பின்பக்க கதவு உடைத்திருந்ததை கண்டு அதிர்ச்சியுற்றார்.
இரண்டு அறைகளில் இருந்த மூன்று பீரோக்கள் உடைக்கப்பட்டு அதில் வைத்திருந்த சுமார் 7 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகள், 2 ஆயிரம் ரூபாய் மற்றும் வங்கிப் புத்தகம் ஏடிஎம் கார்டு உள்ளிட்டவைகள் திருட்டு போனது தெரிய வந்தது.
காவல் கட்டுப்பாட்டு அறை எண்ணுக்கு தகவல் அளித்ததை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு கைரேகை நிபுணர்கள் மற்றும் தாலுகா காவல்துறையினர் வந்து ஆய்வு செய்தனர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.






