search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கத்தி முனையில் விவசாயியிடம் தங்க சங்கிலி பறிப்பு
    X

    கத்தி முனையில் விவசாயியிடம் தங்க சங்கிலி பறிப்பு

    • தனது வயலில் உள்ள வீட்டுத்திண்ணையில் அமர்ந்து இருந்தார்.
    • அணிந்திருந்த ஒன்றரை பவுன் தங்க சங்கிலியை பறித்து கொண்டு தப்பி ஓடினர்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகேயுள்ள மாரசந்திரம் பகுதியை சேர்ந்தவர் குருசாமி (வயது 60). விவசாயி.

    இவர் தனது வயலில் உள்ள வீட்டுத்திண்ணையில் அமர்ந்து இருந்தார்.

    அப்போது அவ்வழியாக 4 ஆசாமிகள் மோட்டார் சைக்கிளில் வந்துள்ளனர். குருசாமியினருகே வந்தவுடன் கத்தியை காட்டி மிரட்டி அவர் அணிந்திருந்த ஒன்றரை பவுன் தங்க சங்கிலியை பறித்து கொண்டு தப்பி ஓடினர்.

    இது குறித்து ஹட்கோ போலீசில் புகார் தரப்பட்டது.அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி தங்க சங்கிலியை பறித்த பாகலூர் ஜி.மங்களம் பகுதியை சேர்ந்த பெயிண்டர் முரளி (27) என்பவரை செய்தனர்.

    மேலும் இவரது கூட்டாளிகளான பெங்களூருவை சேர்ந்த லோகேஷ், ஸ்ரீகாந்த், அப்பு ஆகிய 3 பேரை தேடி வருகின்றனர்.

    Next Story
    ×