search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு சின்னசேலம் வாரச் சந்தையில்  ரூ.75 லட்சத்திற்கு ஆடுகள் விற்பனை
    X

    சின்னசேலம் வாரசந்தையில் விற்பனைக்கு வந்த ஆடுகளை படத்தில் காணலாம்.

    ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு சின்னசேலம் வாரச் சந்தையில் ரூ.75 லட்சத்திற்கு ஆடுகள் விற்பனை

    • சின்னசேலத்தில் வாரந்தோறும் வியாழக்கிழமை அன்று சந்தை நடைபெறுவது வழக்கம்.
    • காலை 5 மணி முதலே சந்தை தொடங்கி இரவு 11 மணி வரை நடைபெறும்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவ ட்டம் சின்னசேலத்தில் வாரந்தோறும் வியாழக்கிழமை அன்று சந்தை நடைபெறுவது வழக்கம். இதில் 50-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து விவசாயிகளும் பொதுமக்களும் தங்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருள்கள் வாங்கி செல்வது வழக்கம். காலை 5 மணி முதலே சந்தை தொடங்கி இரவு 11 மணி வரை நடைபெறும்.

    இதில் சின்னசேலம் சுற்றியுள்ள கிராமத்தைச் சேர்ந்த விவசாயிகள் தங்களுடைய ஆடுகளை விற்பனைக்காக காலையிலே சந்தைக்கு கொண்டு வந்து விற்பனை செய்தனர். பண்டிகை இல்லாத நாட்களில் குறைந்த அளவே ஆடுகள் விற்பனையாகும். ரம்ஜான் பண்டிகை நெருங்கியுள்ள நிலையில் இன்று நடைபெற்ற சின்னசேலம் வாரசந்தையில் பல ஊர்களில் இருந்து விவசாயிகள் கொண்டுவந்த ஆடுகள் 75 லட்சத்திற்கும் மேல் விற்பனையானது. இதில் வியாபாரிகள் ஆடுகளை அதிகளவில் வாங்கி செல்கின்றனர். இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    Next Story
    ×