search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    4 தமிழக மீனவர்களை உடனே மீட்க வேண்டும்- ஜி.கே.வாசன் அறிக்கை
    X

    4 தமிழக மீனவர்களை உடனே மீட்க வேண்டும்- ஜி.கே.வாசன் அறிக்கை

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த 4 மீனவர்கள் நடுக்கடலில் மீன் பிடித்துக்கொண்டிருந்தனர்.
    • இலங்கை அரசால் கைது செய்யப்பட்டுள்ள 4 தமிழக மீனவர்களை மீட்க மத்திய அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    சென்னை:

    த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    நேற்று முன் தினம் நாகப்பட்டினம் மாவட்டம் கோடியக்கரையில் இருந்து விசைப்படகில் மீன் பிடிக்கச் சென்ற மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த 4 மீனவர்கள் நடுக்கடலில் மீன் பிடித்துக்கொண்டிருந்தனர். அப்போது அப்பகுதிக்கு வந்த இலங்கை கடற்படையினர் மீனவர்களை சிறைப்பிடித்து சென்றனர். இரண்டு படகுகளையும் பறிமுதல் செய்துள்ளனர். இது கண்டிக்கத்தக்கது.

    தமிழக மீனவர்கள் தொடர்ந்து இலங்கை கடற்படையினரால் சிறைப்பிடித்து செல்வது நீடித்து வரும் வேளையில் இப்போது மீண்டும் தமிழக மீனவர்களை கைது செய்தது இலங்கை அரசின் நியாயமற்ற நடவடிக்கையாகும். இலங்கை அரசால் கைது செய்யப்பட்டுள்ள 4 தமிழக மீனவர்களையும், 2 படகுகளையும் உடனடியாக மீட்க மத்திய அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×