என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குழந்தையுடன் பெண் சிறுமி மாயம்
    X

    குழந்தையுடன் பெண் சிறுமி மாயம்

    • குழந்தை அக்சிதாவுடன் வீட்டை விட்டு வெளியே சென்ற சந்திரகலா அதன்பிறகு வீடு திரும்பவில்லை.
    • மகேஸ்வரா கொடுத்த புகாரின்பேரில் சூளகிரி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகேயுள்ள சப்பாடி கிராமத்தை சேர்ந்தவர் மகேஸ்வரா. இவரது மனைவி சந்திரகலா (வயது 26), இவர்களுக்கு ஒரு ஆண், ஒரு பெண் குழந்தைகள் உள்ளனர்.

    இந்நிலையில் சம்பவத்தன்று தனது 6 வயது பெண் குழந்தை அக்சிதாவுடன் வீட்டை விட்டு வெளியே சென்ற சந்திரகலா அதன்பிறகு வீடு திரும்பவில்லை.

    இதையடுத்து மகேஸ்வரா கொடுத்த புகாரின்பேரில் சூளகிரி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    இதேபோல ஆந்திர மாநிலத்தை சேர்ந்த பிரவீன்குமார் என்பவர் கிருஷ்ணகிரி அருகேயுள்ள கே.கொத்தூர் பகுதியை சேர்ந்த 14 வயது சிறுமி ஒருவரை கடத்தி சென்று விட்டதாக சிறுமியின் தாய் காந்தம்மா கொடுத்த புகாரின் பேரில் கிருஷ்ணகிரி அனைத்து மகளிர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    இதேபோல அன்செட்டியா அருகேயுள்ள நாட்ராயம்பாளையம் புதூர் பகுதியை சேர்ந்த மாரியப்பன் (40) என்பவர் கடந்த மாதம் 17-ந்தேதி வீட்டை விட்டு சென்றவர் அதன்பிறகு திரும்பவில்லை. இதுகுறித்து அவரது மனைவி பச்சியம்மா தந்த புகாரின்பேரில் அஞ்செட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×