என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தூக்குப்போட்டு இளம்பெண் தற்கொலை
    X

    தூக்குப்போட்டு இளம்பெண் தற்கொலை

    • கடத்தூர் அக்ரஹரம் பகுதியைச் சேர்ந்த மாதேஷ் மகள் உஷாராணி (19) என்பவருக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடந்தது.
    • மனம் உடைந்த உஷாராணி வீட்டுக்குள் சென்று கயிற்றால் தூக்கில் தொங்கியுள்ளார்.

    சேலம்:

    சேலம் மாவட்டம் ஆட்டையாம்பட்டி அருகே பாப்பாரப்பட்டி வெள்ளை யகவுண்டன்காடு பகுதியைச் சேர்ந்த லதிகாசரண் (வயது 29). இவர் ஆட்டையாம்பட்டி பஸ் நிலையத்தில் மீன் கடை வைத்துள்ளார். இவருக்கும் கடத்தூர் அக்ரஹரம் பகுதியைச் சேர்ந்த மாதேஷ் மகள் உஷாராணி (19) என்பவருக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடந்தது. இந்த தம்பதிக்கு 10 மாதத்தில் ஒரு பெண் குழந்தை உள்ளது. நேற்று மதியம் உஷாராணியை வீட்டுக்கு வரும்படி அவருடைய தங்கை போன் செய்து ள்ளார். உடனே அவர், கணவரிடம் தாய் வீட்டுக்கு செல்ல வேண்டும் என்று அழைத்து செல்லுங்கள் என்று கூறியுள்ளார்.

    அதற்கு லதிகாசரண், மீன் வாங்கி வைத்து விட்டு வருகிறேன், அதன்பிறகு செல்லலாம் என்று கூறிய தாக தெரிகிறது. இதற்கி டையே மனம் உடைந்த உஷாராணி வீட்டுக்குள் சென்று கயிற்றால் தூக்கில் தொங்கியுள்ளார். இதை பார்த்த லதிகாசரண், தூக்கில் தொங்கிய மனை வியை மீட்டு ஆட்டை யாம்பட்டியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் உஷாராணி பரிதாபமாக இறந்தார். தகவல் அறிந்த உஷாராணியின் பெற்றோர், ஆட்டையாம்பட்டி போலீ சில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் அம்சவல்லி வழக்குப்பதிவு செய்தார். துணை போலீஸ் சூப்பிரண்டு தையல்நாயகி விசாரணை நடத்தி வரு கிறார். திருமணம் ஆகி ஒரு ஆண்டே ஆவதால் உதவி கலெக்டர் விசாரணைக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×