என் மலர்
உள்ளூர் செய்திகள்

நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் எரிவாயு நுகர்வோர் குறைதீர்வு கூட்டம்-நாளை மறுநாள் நடக்கிறது
- எரிவாயு நுகர்வோர் குறைதீர்வு கூட்டம் நாளை மறுநாள் மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் நடை பெற உள்ளது.
- நுகர்வோர்கள் தங்கள் குறைகள், புகார்களை கூட்டத்தில் தெரிவிக்கலாம்.
நெல்லை:
நெல்லை மாவட்ட வருவாய் அலுவலர் செந்தில் குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:-
நெல்லை கலெக்டர் அலுவலத்தில் எரிவாயு (கியாஸ்) நுகர்வோர் குறைதீர்வு கூட்டம் நாளை மறுநாள் (வெள்ளிக் கிழமை) மாலை 4 மணிக்கு மாவட்ட வருவாய் அலு வலர் தலைமையில் நடை பெற உள்ளது. இதில் அனைத்து எண்ணைய் நிறு வன எரிவாயு முகவர்கள், மாவட்ட எரிவாயு ஒருங்கிணைப்பாளர் மற்றும் எரிவாயு நுகர் வோர்கள் கலந்து கொள்கிறார்கள்.
கூட்டத்தில் நெல்லை மாவட்டத்தை சேர்ந்த அனைத்து எரிவாயு (கியாஸ்) நுகர்வோர்களும் கலந்து கொண்டு, எரிவாயு சிலிண்டர் பதிவு செய்வதில் ஏற்படும் குறைபாடுகள், தடங்கல்கள் மற்றும் எரிவாயு சிலிண்டர்கள் பெறுவதில் ஏற்படும் கால தாமதம் குறித்து தங்கள் குறைகள், புகார்களை தெரிவிக்கலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Next Story