search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குடியிருப்பில் மழைநீர் புகுந்ததால் ஆத்திரம்   தாரமங்கலத்தில் பொதுமக்கள் சாலை மறியல்
    X

    ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து மறியலில் ஈடுபட்டவர்களை படத்தில் காணலாம்.

    குடியிருப்பில் மழைநீர் புகுந்ததால் ஆத்திரம் தாரமங்கலத்தில் பொதுமக்கள் சாலை மறியல்

    • குடியிருப்பில் புகுந்த மழை நீர் வெளியேற வழியின்றி வீடுகளை சூழ்ந்தது.
    • இதனால் குடியிருப்பு வாசிகள் அவதிப்பட்டு வந்தனர்.

    தாரமங்கலம்:

    தாரமங்கலம் அருகே உள்ள கருக்கால்வாடி கிராமம் புகையிலைகாரன் தெருவில் உள்ள குடியிருப்பில் புகுந்த மழை நீர் வெளியேற வழியின்றி வீடுகளை சூழ்ந்தது. இதனால் குடியிருப்பு வாசிகள் அவதிப்பட்டு வந்தனர்.

    இதனிடையே, மழைநீர் வெளியேற உரிய பாதுகாப்பு மற்றும் சாக்கடை வசதி செய்து கொடுக்காத ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து, தாரமங்கலம் - இரும்பாலை பிரதான சாலையில் பவர் கேட் அருகே சாலையில் அமர்ந்து 50-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மறியல் போராட்டம் நடத்தினர்.

    இதுகுறித்து தகவல் அறிந்த தாரமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் தொல்காப்பியன், சப்-இன்ஸ்பெக்டர் காமராஜர் உள்ளிட்ட போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.

    இதையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர். மறியல் போராட்டத்தால் சிறிது நேரம் நேரம் அவ்வழியாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    Next Story
    ×