என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    எரிபொருள் சிக்கன விழிப்புணர்வு பேரணி
    X

    பேரணியில் கலந்துகொண்டவர்களை படத்தில் காணலாம்.

    எரிபொருள் சிக்கன விழிப்புணர்வு பேரணி

    • இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் சார்பில் எரிபொருள் சிக்கன விழிப்புணர்வு பேரணி இன்று காலை சேலத்தில் நடந்தது.
    • சேலம் ஐந்து ரோட்டில் தொடங்கிய பேரணிக்கு சேலம் மாவட்ட துணை மேலாளர் மணிமாறன் தலைமை வகித்தார்.

    சேலம்:

    இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் சார்பில் எரிபொருள் சிக்கன விழிப்புணர்வு பேரணி இன்று காலை சேலத்தில் நடந்தது. சேலம் ஐந்து ரோட்டில் தொடங்கிய பேரணிக்கு சேலம் மாவட்ட துணை மேலாளர் மணிமாறன் தலைமை வகித்தார்.

    தீயணைப்பு அலுவலர் சேகர் முன்னிலை வகித்தார். இதில் ஐ.ஓ.சி.எல். எல்.பி.ஜி. கியாஸ் கோவை மண்டல மேலாளர் பிரியா ரெக்ஸ் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேரணியை தொடங்கி வைத்தார். சேலம் 5 ரோட்டில் தொடங்கிய பேரணி ஸ்டேட் பேங்க் காலனி வரை சென்று, மீண்டும் 5 ரோட்டில் நிறைவு பெற்றது.

    இதில் எல்.பி.ஜி. கேஸ் விநியோகஸ்தர்கள் மற்றும் டெலிவரி மேன்கள் பலர் கலந்து கொண்டு விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி சென்றனர்.

    Next Story
    ×