என் மலர்
உள்ளூர் செய்திகள்

சரக்கு வேன் கவிழ்ந்து விபத்து
சரக்கு வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
பள்ளிபாளையம்:
திருச்செங்கோட்டில் இருந்து நூல்பாவு ஏற்றி கொண்டு சரக்கு வேன் ஒன்று பள்ளிபாளையத்தில் உள்ள விசைத்தறி கூடத்துக்கு வந்தது. பள்ளிபாளையம் அலமேடு அருகே மேம்பால கட்டுமான பணிக்காக குழிகள் தோண்டப்பட்டுள்ளன.
இதனால் அந்த பகுதி சேறும், சகதியுமாக காட்சி அளிக்கிறது. இந்த சேற்றில் சரக்கு வேன் சிக்கி, கவிழ்ந்தது. இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து அந்த பகுதியை சேர்ந்தவர்கள் நூல்பாவுகளை அப்புறப்படுத்தி, சரக்கு வேனை மீட்டனர். இதன்பிறகு அந்த பகுதியில் போக்குவரத்து சீரானது.
Next Story






