search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு தே.மு.தி.க. சார்பில் இலவச கண்சிகிச்சை முகாம்
    X

    கண் சிகிச்சை முகாம் நடைபெற்றபோது எடுத்த படம்.

    கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு தே.மு.தி.க. சார்பில் இலவச கண்சிகிச்சை முகாம்

    • தூத்துக்குடி மாநகர் மாவட்ட தே.மு.தி.க, சார்பில் இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது.
    • கண் சிகிச்சை முகாமில் ஒன்றிய பொறுப்பாளர் விஜி முன்னிலை வகித்தார்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாநகர் மாவட்ட தேசிய முற்போக்கு திராவிட கழகம், நாகர்கோவில் பெஜான் சிங் கண் மருத்துவமனை இணைந்து கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு விஜயகாந்த் ஆணைக்கிணங்க, பிரேமலதாவின் வழிகாட்டுதலின்படியும் இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது.

    இதில் மாவட்ட துணைச் செயலாளர் ராமகிருஷ்ணன் தலைமை தாங்கினார். ஒன்றிய பொறுப்பாளர் விஜி முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியை மாவட்ட விஜயகாந்த் மன்ற செயலாளர் கோவில்ராஜ் ஏற்பாடு செய்திருந்தார்.

    விழாவில் மாவட்ட மாநில பொதுக்குழு உறுப்பினர் பரமசிவம், மாவட்ட மீனவர் அணி செயலாளர் முனியசாமி, மறவன் மடம் ஊராட்சி தலைவர் மரிய புஷ்பலதா, திரேஸ்புரம் பகுதி செயலாளர் முத்து நகர் மு.சம்சுதீன், ஒன்றிய இளைஞரணி செயலாளர் முல்லை கண்ணன், ஸ்ரீவைகுண்டம் ஒன்றிய செயலாளர் முத்துமாரி, ஒன்றிய துணைச் செயலாளர் கர்ணன், 4-வது வார்டு செயலாளர் மைக்கேல் ராஜ், ஊராட்சி செயலாளர் அம்புரோஸ், மாப்பிள்ளையூரணி ஊராட்சி நிர்வாகி பெரியசாமி மற்றும் மறவன்மடம் ஊராட்சி நிர்வாகிகள், திரவியபுரம் ஊர் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

    Next Story
    ×