என் மலர்
உள்ளூர் செய்திகள்

வாசுதேவநல்லூரில் பள்ளி மாணவர்களுக்கு இலவச சைக்கிள்கள்
- விலையில்லா சைக்கிள்களை, மாணவ- மாணவிகளுக்கு சதன் திருமலைக்குமார் எம்.எல்.ஏ., யூனியன் சேர்மன் பொன் முத்தையா பாண்டியன் ஆகியோர் வழங்கினர்.
- நிகழ்ச்சியில் மாவட்ட துணைச்செயலாளர் மனோகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
சிவகிரி:
வாசுதேவநல்லூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா சைக்கிள்களை, மாணவ- மாணவிகளுக்கு சதன் திருமலைக்குமார் எம்.எல்.ஏ., வாசுதேவநல்லூர் யூனியன் சேர்மனும் வாசு. வடக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளருமான பொன் முத்தையா பாண்டியன் ஆகியோர் வழங்கினர். நிகழ்ச்சியில் மாவட்ட துணைச்செயலாளர் மனோகரன், வாசு தெற்கு ஒன்றிய செயலாளர் பூசைப்பாண்டியன், பேரூர் செயலாளர் ரூபி பாலசுப்ரமணியன், ம.தி.மு.க. வாசு. ஒன்றிய செயலாளர் கிருஷ்ணகுமார், பேரூர் செயலாளர் பாசறை கணேசன், மாவட்ட பிரதிநிதி ராமர், தி.மு.க. நிர்வாகிகள் முத்தையா, கட்டபொம்மன், சுந்தர், செல்லத்துரை, ம.தி.மு.க. நிர்வாகிகள் உள்ளார் விக்கி, பள்ளி தலைமை ஆசிரியர், உதவி தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் மற்றும் மாணவ - மாணவிகள் உள்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.
Next Story