search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் இலவச தொழிற்பயிற்சி
    X

    தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் இலவச தொழிற்பயிற்சி

    • 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு லேத் ஆபரேட்டர், 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு சி.என்.சி. ஆபரேட்டர் பயிற்சி அளிக்கப்படுகிறது.
    • பயிற்சி முழுமையாக முடிக்கும் மாணவர்களுக்கு அரசு சான்றிதழ் வழங்கப்படுவதுடன், வேலைவாய்ப்பும் பெற்றுத் தரப்படும்.

    பூதலூர்:

    பூதலூர் அருகே உள்ள புதுப்பட்டி ரம்யா சத்தியநாதன் பாலிடெக்னிக் கல்லூரியில் தமிழ்நாடு அரசு திறன் மேம்பாட்டு கழகத்தின் மூலம் இளைஞர்களுக்கான உதவித்தொகையுடன் கூடிய இலவச தொழிற்பயிற்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு லேத் ஆபரேட்டர், 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவ ர்களுக்கு சிஎன்சி ஆப்ப ரேட்டர் பயிற்சியும் வழங்கப்படுகிறது.

    ஒவ்வொரு பயிற்சியிலும் 30 மாணவர்கள் மட்டுமே சேர்த்துக் கொள்ளப்ப டுகின்றனர். பயிற்சியில் சேரும் மாணவர்களுக்கு பயிற்சி காலத்தில் லேத் ஆப்பரேட்டர் பயிற்சிக்கு ரூ.5000 உதவி தொகையும், சிஎன்சி ஆப்பரேட்டர் பயிற்சிக்கு ரூ.5500 உதவித் ளதொகையும் வழங்கப்படுகிறது.

    பயிற்சி முழுமையாக முடிக்கும் மாணவர்களுக்கு தமிழக அரசு வழங்கும் சான்றிதழ் வழங்கப்படுவதுடன், வேலைவாய்ப்பு பெற்று தரப்படும்.

    இந்த பயிற்சியில் சேருவதற்கான வயது வரம்பு 18 முதல் 35 வரை பயிற்சியில் சேர்ந்து பயன்பெற வேண்டும் என்று ரம்யா சத்தியநாதன் பாலிடெக்னிக் கல்லூரி தலைவர் பொறியாளர் சத்தியநாதன், முதல்வர் குமரன் ஆகியோர் கேட்டுக் கொண்டுள்ளனர்.

    Next Story
    ×