search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வாலிபரை தாக்கிய 4 பேர் கைது
    X

    வாலிபரை தாக்கிய 4 பேர் கைது

    • சதீஷ் அவர்களிடம் மெதுவாக செல்லவேண்டியது தானே என கேட்டுள்ளார்.
    • இதில் ஏற்பட்ட தகராறில் 4 பேரும் சேர்ந்து கையாலும், கட்டையாலும் தாக்கியுள்ளனர்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம், உத்தனப்பள்ளி அருகே உள்ள் அகரம்முருகன் கோவில் பகுதியை சேர்ந்த கிருஷ்ணன் மகன் சதீஷ் (வயது23). இவரும், கிருஷ்ணாபுரம் பகுதியை சேர்ந்த ராஜேஷ் (23),சபரி(19), வேல்முருகன்(19), அம்ப்ரீஷ் (26) ஆகிய 4 பேரும் கெலமங்கலம் மின்வாரியம் அலுவலகம் அருகே காரில் சென்றுள்ளனர். அப்போது சதீஷ் அவர்களிடம் மெதுவாக செல்லவேண்டியது தானே என கேட்டுள்ளார்.

    இதில் ஏற்பட்ட தகராறில் 4 பேரும் சேர்ந்து கையாலும், கட்டையாலும் தாக்கியுள்ளனர். இதில் படுகாயமடைந்த சதீஷ் உத்தனப்பள்ளி போலீசில் கொடுத்த புகார்படி போலீசார் வழக்கு பதிவு செய்து 4பேரையும் கைது செய்தனர்.

    Next Story
    ×