search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆசிரியர்களிடம் வாங்கிய பிரம்படியால் இன்று உயர்ந்த நிலையில் உள்ளேன் -நீதிபதி கிறிஸ்டியன் பேச்சு
    X

    முன்னாள் மாணவர்கள் சந்திப்பு விழாவில் நீதிபதி கிறிஸ்டியன் பேசியபோது எடுத்த படம்.

    ஆசிரியர்களிடம் வாங்கிய பிரம்படியால் இன்று உயர்ந்த நிலையில் உள்ளேன் -நீதிபதி கிறிஸ்டியன் பேச்சு

    • 1998-ம் ஆண்டு பிளஸ் 2 பயின்ற மாணவ- மாணவிகள் 24 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் சந்திக்கும் விழா
    • தங்கள் குழந்தைகளை அவர்கள் பயின்ற வகுப்பறைகளுக்கு அழைத்து சென்று செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.

    திசையன்விளை:

    திசையன்விளை உலக ரட்சகர் மேல்நிலைப்பள்ளியில் 1998-ம் ஆண்டு பிளஸ் 2 பயின்ற மாணவ- மாணவிகள் 24 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் சந்திக்கும் விழா பள்ளி வளாகத்தில் நடந்தது.

    முன்னாள் மாணவர்கள் 127 பேர் குடும்பத்துடன் பள்ளிக்கு வருகை தந்தனர். அவர்கள் தங்கள் பள்ளி பருவ நினைவுகளை பகிர்ந்து கொண்டனர்.

    அவர்கள் குழந்தைகளை அவர்கள் பயின்ற வகுப்பறைகளுக்கு அழைத்து சென்று செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.

    தொடர்ந்து பள்ளி முன்னாள் ஆசிரியர்களுக்கு பாராட்டு விழாவும் நினைவு பரிசு வழங்கும் விழாவும் நடந்தது.

    முன்னாள் மாணவர்கள் ஆசிரியர்களை பாராட்டி பேசினர். முன்னாள் மாணவரும் பாண்டிசேரி மாநில முதன்மை கூடுதல் மாவட்ட உரிமை நீதிபதியுமான கிறிஸ்டியன் பேசியதாவது:-

    ஆசிரியர்கள் மத்தியில் இன்று நான் பேசக்கூடிய அளவிற்கு உயர்ந்ததற்கு மாணவனாக இருந்தபோது ஆசிரியர்களிடம் வாங்கிய அடியே காரணம்.

    ஆசிரியர்கள் அடிப்பது மாணவர்களை திருத்துவதற்காகத்தான். ஆசிரியர்களிடம் இருந்து எப்போது கம்பை (பிரம்பு) நாம் வாங்கி கொண்டோமோ அப்போதில் இருந்து மாணவர்களின் கல்வி திறன் குறைந்துவிட்டது.

    ஆசிரியர்கள் மாணவர்களை அடிப்பது அவர்களை திருத்துவதற்கு தான் என்பதை இக்கால மாணவர்கள் உணரவேண்டும். இவ்வாறு நீதிபதி கூறினார்.

    Next Story
    ×