என் மலர்
உள்ளூர் செய்திகள்

வங்காநரி பாதுகாப்பு விழிப்புணர்வு முகாமில் வனச்சரகர் துரைமுருகன் பேசிய காட்சி.
வங்காநரி ஜல்லிக்கட்டை கைவிட வனத்துறை அறிவுறுத்தல்
- தை மாதத்தில் விளைநிலங்களில் பயிர் செய்தவதற்கு முன், ‘நரி’ முகத்தில் விழித்தால் நல்ல பலன் கிடைக்கும் என, இப்பகுதி மக்கள் நம்பிக்கை கொண்டுள்ளனர்.
- வங்காநரி வனவிலங்கான வங்காநரியை பிடித்து வழிபடுவதும், ஜல்லிக்கட்டு நடத்துவதும் தண்டனைக்குரிய குற்றமாகும்.
வாழப்பாடி:
சேலம் மாவட்டம் வாழப்பாடி பகுதியில் சின்னமநாயக்கன்–பாளையம், ரெங்கனூர், கொட்டவாடி, சின்ன கிருஷ்ணாபுரம், தமையனூர் உள்ளிட்ட கிராமங்களில், தை மாதத்தில் விளைநிலங்களில் பயிர் செய்தவதற்கு முன், 'நரி' முகத்தில் விழித்தால் நல்ல பலன் கிடைக்கும் என, இப்பகுதி மக்கள் நம்பிக்கை கொண்டுள்ளனர்.
இந்நிலையில், வங்காநரி பிடிப்பதை தவிர்த்து பாதுகாப்பது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், வாழப்பாடி வனத்துறை சார்பில், ரெங்கனூர், சின்னம்ம நாயக்கன்பாளையம், கொட்டவாடி கிராமங்களில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு முகாம் நேற்று நடத்தப்பட்டது.
வாழப்பாடி வனச்சரகர் துரைமுருகன் தலைமையில் நடந்த இம்முகாமில், வங்காநரி வனவிலங்கான வங்காநரியை பிடித்து வழிபடுவதும், ஜல்லிக்கட்டு நடத்துவதும் தண்டனைக்குரிய குற்றமாகும். எனவே, வங்காநரி பிடிப்பதை கைவிட வேண்டுமென பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
ஆனால், பல நூறு ஆண்டுகளாக முன்னோர்கள் வழியில் பொங்கல் பண்டிகை தோறும் நடந்து வரும் வங்காநரி வழிபாடு மற்றும் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு வனத்துறையும், தமிழக அரசும் அனுமதிக்க வேண்டுமென கிராம மக்கள் வேண்டுகோள் விடுத்தனர்.






