என் மலர்
உள்ளூர் செய்திகள்

வாலிபருக்கு மிரட்டல் விடுத்த 7 பேர் கைது
- முன் விரோதம் காரணமாக அதே பகுதியை சேர்ந்த இவரது நண்பர் பிரேம் குமாருக்கும் வாசுக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது.
- பிரேம் குமார் மற்றும் அவருடைய நண்பர்கள் 7 பேரை போலீசார் கைது செய்யப்பட்டனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம், குருபரப்பள்ளியை சேர்ந்தவர் நடராஜன். இவரது மனைவி அஞ்சலா. இவரது மகன் வாசு. அப்பகுதியில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை செய்து வந்தார்.
முன் விரோதம் காரணமாக அதே பகுதியை சேர்ந்த இவரது நண்பர் பிரேம் குமாருக்கும் வாசுக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து பிரேம்குமார் அவருடைய நண்பர்களான வாசுதேவன் (21), சோமு (26) சாரதி (25), வினித் (23), சின்ராஜ் (24) சக்திவேல் (26 )ஆகியோருடன் வாசுவின் வீட்டுக்கு சென்று மிரட்டல் விடுத்துள்ளனர்.
இது குறித்து அஞ்சலா கொடுத்த புகாரின் பேரில் பிரேம் குமார் மற்றும் அவருடைய நண்பர்களை போலீசார் கைது செய்யப்பட்டனர்.
Next Story






