என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பாலக்கோட்டில் உணவு பாதுகாப்பு உரிமம் பதிவு முகாம்
    X

    பாலக்கோட்டில் உணவு பாதுகாப்பு உரிமம் பதிவு முகாம்

    • உணவு பாதுகாப்பு உரிமம் பெற்று அதை கடைகளில் மாட்டி வைக்க வேண்டும்.
    • முகாமில் 50-க்கும் மேற்பட்ட உரிமம் மற்றும் பதிவு சான்றிதழ் பெற விண்ணப்பங்கள் பெறப்பட்டன.

    பாலக்கோடு,

    தருமபுரி மாவட்டம், பாலக்கோட்டில் உணவு பாதுகாப்புத்துறை சார்பாக பாலக்கோடு அறிவு திருக்கோவில் மனவளக்கலை பயிற்சி மன்ற வளாகத்தில் உணவு பாதுகாப்பு உரிமம் மற்றும் பதிவு பெற, மற்றும் புதுப்பித்தல் விண்ணப்பங்கள் பெறும் முகாம் அனைத்து வணிகர் சங்க தலைவர் முத்து, செயலாளர் சரவணன், பொருளாளர் மாணிக்கம் ஆகியோர் முன்னிலையில் நடைப்பெற்றது.

    இதற்கு மாவட்ட நியமன அலுவலர் மருத்துவர் ஏ.பானு சுஜாதா, அவர்கள் தலைமை வகித்து பேசுகையில், தருமபுரி மாவட்டத்தில் அனைத்து உணவு வணிகர்களும் உரிய உணவு பாதுகாப்பு உரிமம் பெற்று அதை தங்கள் நிறுவனங்களின் நிலையங்களில் கடைகளில் நுகர்வோர் காணும் வகையில் மாட்டி வைக்க வேண்டும். மேலும் முறையாக காலாவதி தினத்திற்கு முப்பது தினங்களுக்கு முன்பாக புதுப்பித்து கொள்ளுதல் அவசியம் என தெரிவித்தார்.

    இம் முகாமில் 50-க்கும் மேற்பட்ட உரிமம் மற்றும் பதிவு சான்றிதழ் பெற புதிய மற்றும் புதுப்பித்தல் விண்ணப்பங்கள் பெறப்பட்டன.

    பெறப்பட்ட விண்ணப்பங்கள் உரிய முறையில் பதிவேற்றப்பட்டு , உரிய ஆய்வுக்கு பின் சான்றிதழ்களை இணையதள முகவரியிலோ அல்லது உணவு பாதுகாப்பு அலுவலர் அலுவலகத்திலோ பெற்றுக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டது.

    நிகழ்ச்சியின் முடிவில் வணிகர் சங்க பொருளாளர் மாணிக்கம் அவர்கள் நன்றி உரையாற்றினார்.

    Next Story
    ×