என் மலர்
உள்ளூர் செய்திகள்

பரமத்திவேலூர் பூ ஏலம் மார்க்கெட்டில் பூ விற்பனை நடைபெற்றுக் கொண்டிருந்தபோது எடுத்த படம்.
பனிப்பொழிவால் பூக்களின் விலை உயர்வு
- பரமத்திவேலூர் மற்றும் கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் சுற்று வட்டாரப் பகுதிகளில் குண்டு மல்லிகை, முல்லைப்பூ, அரளி, சம்பங்கி, ரோஜா, செவ்வந்தி உள்ளிட்ட வகையான பூக்கள் பயிர் செய்யப்பட்டுள்ளது.
- இந்த நிலையில் கார்த்திகை மாதத்தில் பனிப் பொழிவு காரணமாக பூக்கள் உற்பத்தி குறைந்துள்ளது.
பரமத்திவேலூர்:
பரமத்திவேலூர் மற்றும் கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் சுற்று வட்டாரப் பகுதிகளில் குண்டு மல்லிகை, முல்லைப்பூ, அரளி, சம்பங்கி, ரோஜா, செவ்வந்தி உள்ளிட்ட வகையான பூக்கள் பயிர் செய்யப்பட்டுள்ளது.
இங்கு விளையும் பூக்களை விவசாயிகள் பரமத்தி வேலூரில் உள்ள பூக்கள் ஏல சந்தைகளுக்கு கொண்டு வருகின்றனர்.வேலூர், ஜேடர்பாளையம், கபிலர்மலை, பரமத்தி, பாலப்பட்டி மற்றும் கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த வியாபாரிகள் பூக்களை ஏலம் எடுக்க வருகின்றனர்.
கடந்த வாரம் நடைபெற்ற ஏலத்தில் குண்டுமல்லிகை ரூ.700-க்கும்,சம்பங்கி கிலோ ரூ.60-க்கும், அரளி கிலோ ரூ.150-க்கும், ரோஜா கிலோ ரூ.160-க்கும், முல்லைப் பூ ரூ.600-க்கும், செவ்வந்திப்பூ ரூ.100-க்கும், கனகாம்பரம் ரூ.600-க்கும் ஏலம் போனது.
இந்த நிலையில் கார்த்திகை மாதத்தில் பனிப் பொழிவு காரணமாக பூக்கள் உற்பத்தி குறைந்துள்ளது.இதனால் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஏலத்தில் குண்டு மல்லிகை கிலோ ரூ.1200-க்கும், சம்பங்கி கிலோ ரூ100- க்கும், அரளி கிலோ ரூ.200- க்கும், ரோஜா கிலோ ரூ.200- முல்லைப் பூ கிலோ ரூ.900-க்கும், செவ்வந்திப்பூ ரூ.160- க்கும், கனகாம்பரம் ரூ.1200-க்கும் ஏலம் போனது. இந்த விலை உயர்வால் பூக்கள் பயிர் செய்துள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.






