search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மீனவர்கள் சாலை மறியல்
    X

    மீன்களை தரையில் கொட்டி மீனவர்கள் சாலை மறியல்.

    மீனவர்கள் சாலை மறியல்

    • ஆவேசமடைந்த மேலபட்டினச்சேரி மீனவர்கள் இன்று திடீரென நாகூரில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    • வாக்குவாதத்தில் மீனவர் ஒருவர் திடீரென டீசலை தலையில் ஊற்றி தீக்குளிக்க முயற்சித்தார்.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டிணம் மாவட்டம் நாகூரில் மேலபட்டினச்சேரி மற்றும் கீழப்பட்டினச்சேரி மீனவர்களுக்கு இடையே துறைமுகத்தில் மீன் விற்பனை செய்வது தொடர்பாக பிரச்சினை எழுந்துள்ளது. இந்நிலையில் 61 நாட்கள் மீன்பிடி தடைக்காலம் முடிந்து இன்று மீன்பிடித்து விட்டு கரை திரும்பிய மேலபட்டினச்சேரி மீனவர்கள் பிடித்து வந்த மத்தி மீன்களை நாகூர் துறைமுகத்தில் விற்பனை செய்யக்கூடாது என மற்றொரு தரப்பு மீனவர்கள் தடுத்துள்ளனர்

    மேலும் அந்த மீன்களை வியாபாரிகள் ஏலம் எடுக்க கூடாது எனவும் கூறியுள்ளனர். இதனால் ஆவேசமடைந்த மேலபட்டினச்சேரி மீனவர்கள் இன்று திடீரென நாகூரில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர் அப்போது மீனவர்கள் பிடித்து வந்த மீன்கள் விற்பனை செய்ய முடியாததால் ஆத்திரமடைந்து அவர்கள் பிடித்து வந்த அந்த மீன்களை சாலையில் கொட்டி துறைமுகத்தில் மீன் விற்க தங்களுக்கு உரிமை வேண்டும் என கோஷங்களை எழுப்பினர்.

    மீனவர்களின் சாலை மறியல் போராட்டத்தால் நாகூர் காரைக்கால் தேசிய நெடுஞ்சாலையில் பல மணி நேரம் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது இதையடுத்து அங்கு வந்த டிஎஸ்பி சரவணன் நாகூர் இன்ஸ்பெக்டர் சோமசுந்தரம்ஆகியோர் சாலை மறியல் போரா ட்டத்தில் ஈடுபட்ட மீனவர்களிடம் பேச்சுவா ர்த்தையில் ஈடுபட்டனர்அப்போது போலீசா ருக்கும் மீனவர்களுக்கும் இடையே கடும் வாக்கு வாதம் ஏற்பட்டது இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது வாக்குவாதத்தில் ஈடுபட்ட மீனவர் ஒருவர் திடீரென டீசலை தலையில் ஊற்றி தீக்குளிக்க முயற்சித்தார் இதனால் அங்கு பெரும் பரபரப்பு நிலவியது.அதனைத் தொடர்ந்து நாகூர் மீன்பிடி துறைமுக த்தில் மீன்கள் விற்க நடவடிக்கை எடுக்கப்படும் என மீன்வளத்துறை இணை இயக்குனர் ஜெயராஜ் மீனவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உறுதியளித்ததை தொடர்ந்து மீனவர்கள் சாலை மறியல் போராட்டத்தை விலக்கிக் கொண்டனர்.

    அரசால் கட்டப்பட்ட மீன்பிடி துறைமுகத்தில் தங்களுக்கு சம உரிமை வழங்கி மீன்களை எந்த ஒரு பிரச்சனையுமின்றி விற்பனை செய்வதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாகூர் மேலப்பட்டினச்சேரி மீனவர்கள் வலியுறு த்தியுள்ளனர்.அதனை தொடர்ந்து மேல பட்டினச்சேரி மீனவர்கள் மீன்வளத்துறை அதிகாரிகள் முன்னிலை யில், பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நாகூர் துறைமுகத்தில் மீன் விற்பனை மற்றும் ஏலத்தை தொடங்கினார்கள். தொடர்ந்து நாகூர் துறைமு கத்தில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    Next Story
    ×