search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கடலூர் துறைமுகத்தில் மீன்கள் விலை உயர்வு
    X

    கடலூர் முதுநகர் துறைமுகம் பகுதியில் மீன்களை வாங்க திரண்ட பொதுமக்களை படத்தில் காணலாம்.

    கடலூர் துறைமுகத்தில் மீன்கள் விலை உயர்வு

    • மீனவர்கள் தினந்தோறும் தங்கள் விசை மற்றும் பைபர் படகுகளில் மீன் பிடிக்க சென்று வருகின்றனர்.
    • மீன்களை போட்டி போட்டு வாங்கி சென்றனர்.

    கடலூர்:

    கடலூர் துறைமுகத்தில் இருந்து ஏராளமான மீனவர்கள் தினந்தோறும் தங்கள் விசை மற்றும் பைபர் படகுகளில் மீன் பிடிக்க சென்று வருகின்றனர். இதனை தொடர்ந்து கடலூர் துறைமுகத்தில் அதிகாலை முதல் மீன் விற்பனை தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வரும். இதனை உள்ளூர் மற்றும் வெளியூர் வியாபாரிகள் மட்டுமின்றி பொதுமக்களும் போட்டி போட்டு வாங்கி சென்று வருகின்றனர். இந்த நிலையில் கடந்த சில வாரங்களாக மீன் வறத்து குறைவாக இருந்து வந்ததால் மீன்களின் விலை அதிகரித்து காணப்பட்டன. இன்று கடலூர் துறைமுகத்தில் அதிகாலை முதல் ஏராளமான பொதுமக்கள் மீன்களை போட்டி போட்டு வாங்கி சென்றதை காண முடிந்தது. இதில் இன்று மீன்கள் விலை அதிகரித்து காணப்பட்டது.

    வழக்கமாக ரூ.1100-க்கு விற்பனையான வஞ்சரம் ரூ.1400-க்கும், ரூ.300-க்கு விற்பனையான பாறை ரூ. 500 -க்கும், ரூ. 250-க்கு விற்பனையான நெத்திலி ரூ. 300 -க்கும், ரூ. 200-க்கு விற்பனையான இறால் ரூ.300 -க்கும் விற்பனையாகி வந்தன.ஏற்கனவே காய்கறிகள் விலையும் உயர்ந்துள்ளதால் பொதுமக்கள் மீன்களை குறைந்து அளவில் வாங்கி சென்றனர். இருப்பினும் கடலூர் துறைமுகத்தில் இன்று காலை மீன்கள் வாங்கப் பொதுமக்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.

    Next Story
    ×