என் மலர்
உள்ளூர் செய்திகள்

தெல்லன அள்ளி கிராமத்தில் தீ விபத்து ஏற்பட்ட பிளாஸ்டிக் குடோனை படத்தில் காணலாம்.
பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து
- இன்று அதிகாலை திடீரென கடையில் உள்ள குடோனில் இருந்து புகை வந்தது.
- தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்து அணைத்தனர்.
காரிமங்கலம்,
தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் வட்டம், திண்டல் அடுத்த தெல்லன அள்ளி கிரா மத்தில் எச்சனம்பட்டியை சேர்ந்த மாரிமுத்து என்பவர் பழைய இரும்பு கடை நடத்தி வந்தார்.
மேலும் அவர் பிளாஸ்டிக் பொருட்களை குடோனில் சேகரித்தும் வைத்து இருந்தார்.
இந்த நிலையில் நேற்று மாலை வழக்கம் போல் கடையை பூட்டி விட்டு வீட்டிற்கு சென்று விட்டார். பின்னர் இன்று அதிகாலை திடீரென கடையில் உள்ள குடோனில் இருந்து புகை வந்தது. இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் அதிர்ச்சி அடைந்தனர்.
இது குறித்து கடையின் உரிமையாளர் மாரிமுத்து வுக்கு தகவல் தெரி விக்கப் பட்டது. உடனே அவர் விரைந்து வந்து பார்வை யிட்டார்.
அப்போது குடோன் முழுவதும் தீ பற்றி குபுகுபு வென எரிந்து ெகாண்டி ருந்தது. இது குறித்து பாலக்கோடு தீயணைப்பு துறையினருக்கு தகவல் ெதரிவிக்கப்பட்டது. அதன் பேரில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். மேலும் காரிமங்க லம் போலீசார் அங்கு விரைந்து வந்தனர்.
தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்து அணைத்தனர். இந்த தீ விபத்து குறித்து காரிமங்கலம் போலீசார் விசார ணை நடத்தி வருகின்றனர்.






