என் மலர்
உள்ளூர் செய்திகள்

வியாபாரிகள் நலச்சங்கம் சார்பில் நிதி உதவி
- தீ விபத்தில் பாதிக்கப்பட்ட வியாபாரிகளுக்கு நிதி உதவி வழங்கப்பட்டது.
- சங்கத் தலைவர் ஆர். சுரேஷ்குமார் தலைமையில் நிகழ்ச்சி நடைபெற்றது
பொன்னேரி:
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்புடன் இணைக்கப்பட்ட திருவேங்கடபுரம், வேம்பாக்கம், தடப்பெரும்பாக்கம் சுற்று வட்டார வியாபாரிகள் நலச்சங்கம் சார்பில் தீ விபத்தில் பாதிக்கப்பட்ட வியாபாரிகளுக்கு நிதி உதவி வழங்கும் நிகழ்ச்சி திருவேங்கடபுரம் சங்க அலுவலகத்தில் நடைபெற்றது, சங்கத் தலைவர் ஆர். சுரேஷ்குமார் தலைமை தாங்கினார். தங்கராஜ், நாகராஜ், ரமேஷ், பிரதாப் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சங்கச் செயலாளர் செல்லதுரை வரவேற்புரை வழங்கினார்.
மாவட்டத் தலைவர் டி.நந்தன் மற்றும் அமைப்புச் செயலாளர் எஸ்.வி.முருகன், சட்ட ஆலோசகர் வழக்குறிஞர் விக்னேஷ் உதயன், . பாலச்சந்தர், மகேந்திரன், வழக்கறிஞர் சதீஷ் சரண்குமார், ராமு ஆகியோர் கலந்துகொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் தீ விபத்தில் பாதிக்கப்பட்ட சங்க உறுப்பினர்கள் கந்தன், இதயகுமார் ஆகியோருக்கு சங்கத்தின் சார்பாக நிதி உதவி வழங்கப்பட்டது. இறுதியில் செந்தூர் முருகன் டிரேடர்ஸ் உரிமையாளர் சோமசுந்தரம் நன்றி கூறினார்.






