search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பண்ருட்டி அருகே  மகன் இறந்த துக்கத்தில் தந்தைவிஷம் குடித்து தற்கொலை.
    X

    பண்ருட்டி அருகே மகன் இறந்த துக்கத்தில் தந்தைவிஷம் குடித்து தற்கொலை.

    • மகன் இறந்த துக்கத்தில் தந்தை விஷம் குடித்து தற்கொலை.
    • மகன் இறந்த சோகத்தில், நிலத்திற்காக வாங்கி வைத்திருந்த மருந்தினை எடுத்து அன்பழகன் குடித்துவிட்டார்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி பெரிய காட்டுப் பாளையத்தை சேர்ந்தவர் அன்பழகன் (வயது 56). விவசாயி. இவருக்கு 2 மகன்கள். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னர் இவரது இளைய மகன் விபத்தில் பலியானர். மகன் இறந்த தூக்கத்தில் தந்தை அன்பழகன் மதுவுக்கு அடிமையானார் தைப்பூச தினமான நேற்று மகனின் நினைவு அவருக்கு மீண்டும் வந்தது. ஒவ்வொரு தைப்பூச தினத்தன்றும் அப்பாவிடம் காசு வாங்கிக் கொண்டு வடலூர் செல்வாயே, இன்று நீ இல்லையே என்று அழுது கொண்டே புலம்பியுள்ளார். இவரது பெரியமகன் மற்றும் மனைவி 2 பேரும் அன்பழகனுக்கு ஆறுதல் கூறினர்.

    சிறிது நேரம் கழித்து இவரது மகனும், மனைவியும் வீட்டிலிருந்து வெளியில் சென்றனர். மகன் இறந்த சோகத்தில், நிலத்திற்காக வாங்கி வைத்திருந்த மருந்தினை எடுத்து அன்பழகன் குடித்துவிட்டார். சிறிது நேரத்தில் வீட்டிற்கு வந்த மனைவி கணவன் மயங்கிய நிலையில் கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். அக்கம் பக்கத்தினர் உதவியுடன் இவரை மீட்டு பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். மேல் சிகிச்சைக்காக கடலூர் கொண்டு செல்லப்பட்ட அவர் அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து காடாம்புலியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜதாமரை பாண்டியன், சப் இன்ஸ்பெக்டர் பூவராகவன் ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×