search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நீலகிரியில் 8-வது நாளாக உண்ணாவிரதம் தொடர்கிறது
    X

    நீலகிரியில் 8-வது நாளாக உண்ணாவிரதம் தொடர்கிறது

    • போராட்டக்காரர்களுடன் போலீஸ் டி.எஸ்.பி. பேச்சுவார்த்தை
    • ஊட்டி பகுதியில் உள்ள அன்னி கொரை, இத்தலார் ஆகிய பகுதிகளிலும் விவசாயிகள் போராட்டம் நடக்கிறது

    அரவேணு,

    நீலகிரி மாவட்டத்தில் தேயிலைக்கு உரிய விலை வேண்டியும், சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பை அமுல்படுத்த கோரியும் தேயிலை விவசாயிகள் கடந்த 1-ந்தேதி முதல் கோத்தகிரி அருகே நட்டக்கல் பகுதியில் நாக்கு பெட்டா படுகர் நல சங்கம் சார்பில் தொடர் உண்ணா விரதப் போராட்டம் நடத்தி வருகின்றனர். இது தற்போது 8-வது நாளாக இன்றும் தொடர்ந்து நடக்கிறது.

    கோத்தகிரி நட்டக்கல் பகுதியில் நேற்று நடந்த போ ராட்டத்திற்கு பொரங்காடு சீமை படுகர் நலச்சங்க தலைவர் தியாகராஜன் தலைமை தாங்கினார். மேல்பிக்கட்டி ஊர் தலைவர் மகாலிங்கா கவுடர், கீழ் பிக்கட்டி ஊர் தலைவர் அண்ணாதுரை, கட்டபெட்டு ஊர் தலைவர் மடியாகவுடர், மல்லிகொரெ ஊர் தலைவர் மகாலிங்கா கவுடர், ஒன்னோரெ ஊர் தலைவர் கிருஷ்ணா கவுடர், மஞ்சிதா ஊர் தலைவர் சண்முகா கவுடர், பேரட்டி ஊர் தலைவர் காந்தி கவுடர் ஆகியோர் போராட்டத்தை தொடங்கி வைத்தனர். இதில் மேல்பிக்கட்டி, கீழ்பிக்கட்டி, கட்டபெட்டு, மல்லிகொரெ, ஒன்னோரெ, மஞ்சிதா, பேரட்டி ஆகிய கிராமங்களில் இருந்து 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    முன்னதாக அனைத்து கிராம மக்களும் படுகர் இன மக்களின் குல தெய்வ மான ஹெத்தையம்மனை வழிபட்டனர். பின்னர் அவர்கள் நட்டக்கல் போராட்ட பந்தலுக்கு வந்தனர்.

    அப்போது குன்னூர் போலீஸ் டி.எஸ்.பி குமார் போராட்ட களத்துக்கு வந்து நீங்கள் உண்ணாவிரத போராட்டத்தை கைவிட்டு கலைந்து செல்ல வேண்டும் என்று கூறினார் இதனால் அந்த பகுதியில் சலசலப்பு ஏற்பட்டது. ஊட்டி பகுதியில் உள்ள அன்னி கொரை, இத்தலார் ஆகிய பகுதிகளிலும் விவசாயிகள் போராட்டத்தை நடத்தி வருகின்றனர். மேலும் கிராமங்களில் வசிக்கும் தேயிலை விவசாயிகள், இலை பறிக்க செல்லாமல் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    Next Story
    ×