search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கன்னிவாடி சந்தையில் ஆடுகள் விலை குறைந்ததால் விவசாயிகள் கவலை
    X

    கோப்புபடம்

    கன்னிவாடி சந்தையில் ஆடுகள் விலை குறைந்ததால் விவசாயிகள் கவலை

    • ஆடுகள் வரத்து அதிகமானதால் ஆடுகளின் விலை வெகுவாக குறைந்தது.
    • சென்ற வாரம் 10 கிலோ எடையுள்ள ஆடு ரூ.5 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்பட்டது.

    மூலனூர் :

    தமிழகத்தில் நடைபெறும் பெரிய ஆட்டு சந்தைகளில் ஒன்று கன்னிவாடி ஆட்டுச்சந்தை ஆகும். இந்த சந்தை வாரந்தோறும் வெள்ளிக்கிழமையன்று நடைபெற்று வருகிறது. இந்த சந்தைக்கு கோவை, பொள்ளாச்சி, உடுமலை, மதுரை, திருச்சி, சென்னை போன்ற தமிழகத்தின் பெருநகரங்கள் மட்டுமின்றி கேரளா, கர்நாடகா, ஆந்திரா போன்ற அண்டை மாநிலங்களை சேர்ந்த வியாபாரிகள் கன்னிவாடி ஆட்டுச் சந்தையில் வந்து ஆடுகளை வாங்கி செல்கின்றனர்.

    இந்த வாரம் ஆடுகள் வரத்து அதிகமானதால் ஆடுகளின் விலை வெகுவாக குறைந்தது. சென்ற வாரம் 10 கிலோ எடையுள்ள ஆடு ரூ.5 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்பட்டது. இந்த வாரம் அதே ஆடு ரூ.4 ஆயிரத்திற்கு விற்பனை ஆனது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்தனர். இந்த வாரம் ஆடுகளின் வரத்து அதிகமானதாலும், வியாபாரிகளின் வருகை குறைந்ததாலும் ஆடுகளின் விலை வெகுவாக குறைந்தது.

    Next Story
    ×