என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
குறுவை தொகுப்பு திட்டத்தில் பயனடைந்த விவசாயிகள்; முதல்-அமைச்சருக்கு நன்றி தெரிவித்தனர்
- 22,892 விவசாயிகளுக்கு குறுவை தொகுப்பு வழங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
- குறுவை சாகுபடி தொகுப்பு திட்டம் மூலம் 9,78,007 கிலோ யூரியா வழங்கப்பட்டுள்ளது.
மயிலாடுதுறை:
சுதந்திரத்திற்கு பிறகு வரலாற்றில் முதன்முறையாக முன்கூட்டியே மேட்டூர் அணை திறக்கப்பட்டதன் காரணமாக டெல்டா மாவட்டங்களில் கடந்த ஆண்டை விட குறுவையில் 5.20 லட்சம் ஏக்கரும், சம்பாவில் 13.5 லட்சம் ஏக்கரும் சாகுபடி பரப்பு உயரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
மயிலாடுதுறை மாவட்டத்தில் 40,005 ஏக்கர் குறுவை சாகுபடி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. மாவட்டத்தில் 41,949 விவசாயிகள் கண்றியப்ப–ட்டுள்ளனர். அவர்களில் 22,892 விவசாயிகளுக்கு குறுவை தொகுப்பு வழங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதுவரை 8,916 விவசாயிகளுக்கு குறுவை தொகுப்பு திட்டத்தில் வழங்கப்பட்டுள்ளது.
மாவட்டத்தில் குறுவை சாகுபடி தொகுப்பு திட்டம் மூலம் 9,78,007 கிலோ யூரியா வழங்கப்பட்டுள்ளது. 10,86,963 கிலோ டிஏபி வழங்கப்பட்டுள்ளது. 5,43,066 கிலோ பொட்டாஷ் வழங்கப்பட்டுள்ளது. இதுவரை குறுவை சாகுபடி தொகுப்பு திட்டத்தில் 3,58,756 கிலோ யூரியா வழங்கப்பட்டுள்ளது. 3,98,688 கிலோ டிஏபி வழங்கப்பட்டுள்ளது. 1,99,241 கிலோ பொட்டாஷ் வழங்கப்பட்டுள்ளது.
குறுவை சாகுபடி தொகுப்பு திட்டத்தில் பயன்பெற்ற விவசாயிகள் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.மயிலாடுதுறை மாவட்டம் மறையூர் கிராமத்தை சேர்ந்த வசந்தகுமார் கூறும்போது:-எனக்கு உள்ள 3 ஏக்கர் நிலத்தில் மறையூர் கிராமத்தில் நெல் சாகுபடி செய்து வருகிறேன். தமிழக அரசால் அறிவிக்கப்பட்ட குறுவை தொகுப்பு திட்டத்தில் எனக்கு 1 ஏக்கருக்கு 45 கிலோ யூரியா, 50 கிலோ டிஏபி, 24 கிலோ பொட்டாஷ் இலவசமாக பெற்றேன். இதனை வழங்கிய தமிழக முதலமைச்சருக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் என்றார்.
மயிலாடுதுறை மாவட்டம் முட்டம், அகரகீரங்குடி கிராமத்தை சேர்ந்த அன்பழகன் கூறும்போது:-
எனக்கு உள்ள 4 ஏக்கர் பரப்பளவில் நெல் சாகுபடி செய்து வருகிறேன். தமிழக அரசால் அறிவிக்கப்பட்ட குறுவை தொகுப்பு திட்டத்தில் எனக்கு 1 ஏக்கருக்கு 45 கிலோ யூரியா, 50 கிலோ டிஏபி, 24 கிலோ பொட்டாஷ் இலவசமாக பெற்றேன் என்றார்.
மறையூர் மேலத்தெரு ராஜசேகர் கூறும்போது:-
எனக்கு உள்ள 2 ஏக்கர் நிலத்தில் மறையூர் கிராமத்தில் நெல் சாகுபடி செய்து வருகிறேன். தமிழக அரசால் அறிவிக்கப்பட்ட குறுவை தொகுப்பு திட்டத்தில் எனக்கு 1 ஏக்கருக்கு 45 கிலோ யூரியா, 50 கிலோ டிஏபி, 24 கிலோ பொட்டாஷ் இலவசமாக பெற்றேன் என்றார். இதேப்போல் பலன் அடைந்த அனைத்து விவசாயிகளுக்கு முதலமைச்சருக்கு பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்