search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சரிந்தது தக்காளி, எகிறியது வெங்காயம் காய்கறிகளுக்கு விலை கிடைக்காமல் விவசாயிகள் தவிப்பு
    X

    ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டுக்கு வந்த வெங்காயம் மின்விசிறி மூலம் உலற வைக்கப்படும் காட்சி.

    சரிந்தது தக்காளி, எகிறியது வெங்காயம் காய்கறிகளுக்கு விலை கிடைக்காமல் விவசாயிகள் தவிப்பு

    • வெங்காயம் சாகுபடி செய்த விவசாயிகள் அதனை இருப்பு வைக்க முடியாததால் அழுகி வருகிறது.
    • பருவமழை முடியும் வரை இதே நிலை தொடரும் என்பதால் விவசாயிகள் மட்டுமின்றி பொதுமக்களும் சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர்.

    சத்திரப்பட்டி:

    திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் மார்க்கெ ட்டுக்கு பல்வேறு ஊர்களில் இருந்து தினசரி சுமார் 3 டன் வரை காய்கறிகள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது.

    பண்டிகை மற்றும் விசேச நாட்களில் அதிக அளவு காய்கறிகள் வரத்து இருக்கும். கடந்த சில நாட்களாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்து வருகிறது. இதனால் பெரும்பாலான காய்கறிகள் தண்ணீரில் மூழ்கியும், பறிக்க முடியாத நிலையில் அழுகியும் வருகிறது. இதனால் காய்கறி செடிகள் பயிரிட்ட விவ சாயிகள் மிகுந்த நஷ்டத்தை சந்தித்து வருகின்றனர். குறிப்பாக வெங்காயம் சாகுபடி செய்த விவசாயிகள் அதனை இருப்பு வைக்க முடியாததால் அழுகி வருகிறது.

    இதன் காரணமாக ஒட்டன்சத்திரம் மார்க்கெ ட்டில் சின்ன வெங்காயம் ஒரு கிலோ ரூ.95 முதல் விற்பனை யாகிறது. வெளி மார்க்கெ ட்டில் இதைவிட கூடுதலாக விற்கும் என்பதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சி அடைந்து ள்ளனர்.

    ஆனால் அதே வேளையில் தக்காளி வரத்து அதிகரித்துள்ளதால் ஒரு கிலோ ரூ.10 முதல் ரூ.15-க்கு விற்பனையாகிறது. இதன் காரணமாக உரிய விலை கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் தக்காளியை பறிக்காமலும், பறித்த தக்காளியை குப்பையிலும் விவசாயிகள் கொட்டி செல்கின்றனர்.

    இதேபோல முருங்கை ஒரு கிலோ ரூ.50 முதல் ரூ.60 வரையிலும், வெண்டை க்காய் கிலோ ரூ.20 என்ற விலையிலும் விற்பனையா கிறது.

    பெரும்பாலான காய்கறிகள் விலை அதிகரித்துள்ளதும், ஒருசில காய்கறிகள் கடும் வீழ்ச்சி அடைந்துள்ளதும் விவசாயி களுக்கு கவலையை ஏற்படுத்தி உள்ளது. டெல்டா மாவட்டங்களில் ெதாடர் மழை பெய்து வருவதால் அங்கிருந்து காய்கறிகள் வரத்து குறைந்ததால் இதுபோன்ற நிலையற்ற விலை உள்ளதாக வியாபாரிகள் தெரி வித்தனர்.

    பருவமழை முடியும் வரை இதே நிைல தொடரும் என்பதால் விவசாயிகள் மட்டுமின்றி பொதுமக்களும் சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர்.

    Next Story
    ×