என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
விவசாயிகள் 'திடீர்' சாலை மறியல்
- திருத்துறைப்பூண்டி - முத்துப்பேட்டை கிழக்கு கடற்கரை சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
- அப்பகுதியில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
முத்துப்பேட்டை:
திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை ஒன்றியத்துக்கு உட்பட்ட கீழ பெருமலை, மேல பெருமலை. குன்னத்தூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பல ஏக்கர் நிலப்பரப்பில் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இந்த நெல் சாகுபடி வயலுக்கு தேவையான நீர் முறையாக வரவில்லை. இதனால் வயலில் வெடிப்பு ஏற்பட்டு பயிர்கள் கருகும் நிலைக்கு சென்றது.
இதனால் ஆத்திரமடைந்த விவசாயிகள் சுமார் 50-க்கும் மேற்பட்டடோர் ஊராட்சி மன்ற தலைவர்கள் வளர்மதி, முருகானந்தம், செல்வி ஆகியோர் தலைமையில் இன்று திருத்துறைப்பூண்டி - முத்துப்பேட்டை கிழக்கு கடற்கரை சாலையில் முத்துப்பேட்டை அருகே உள்ள பாண்டி கடை தெரு பகுதியில் திடீர் சாலை மறியலில் ஈடுப்பட்டனர்.
இந்த திடீர் சாலை மறியலால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இது குறித்து தகவல் அறிந்ததும் எடையூறு போலீசார் மற்றும் திருத்து றைப்பூண்டி உட்கோட்ட பொதுப்ப ணித்துறை உதவி செயற்பொறியாளர் சங்கர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சாலை மறியலில் ஈடுபட்ட விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
பேச்சுவார்த்தை முடிவில் விரைவில் வயலுக்கு தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி கூறினர். இதைத்தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்ட விவசாயிகள் கலைந்து சென்றனர்.
இதனால் இப்பகுதியில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்