search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விவசாயிகள் சாலை மறியல்
    X

    சாலை மறியலில் ஈடுபட்ட விவசாயிகள்.

    விவசாயிகள் சாலை மறியல்

    • கரும்பு நிலுவை தொகை வழங்காததை கண்டித்து 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் உத்தாணி மெயின் ரோட்டில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    • தஞ்சாவூர்-கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    பாபநாசம்:

    தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுக்கா திருமண்டங்குடி கிராமத்தில் அமைந்துள்ள ஆரூரான் சர்க்கரை ஆலை நிர்வாகம் விவசாயிகளுக்கு கரும்பு நிலுவை தொகையினை வழங்காததை கண்டித்து நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் பாபநாசம் அருகே உத்தாணி மெயின் ரோட்டில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதனால் தஞ்சாவூர்-கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பேருந்துகள் மாற்றி விடப்பட்டன. சம்பவ இடத்திற்கு கும்பகோணம் வருவாய் கோட்டாட்சியர் லதா, பாபநாசம் வட்டாட்சியர் மதுசூதனன் மற்றும் போலீசார் விரைந்து வந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

    வருகிற 21-ந்தேதி மதியம் 12 மணி அளவில் கும்பகோணம் ஆர்.டி.ஓ. தலைமையில் ஆலை நிர்வாகம், விவசாயிகள் மற்றும் தொடர்புடைய பிற நபர்களின் அழைத்து தீர்வு காண்பதற்கான ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டது. இதனை ஏற்றுக்கொண்டு விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டனர்.

    Next Story
    ×