search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கொடைக்கானல் சாகச சுற்றுலா மையத்துக்கு விவசாயிகள் எதிர்ப்பு
    X

    அமைதி பேச்சுவார்த்தைக்கு வந்த விவசாயிகள்.

    கொடைக்கானல் சாகச சுற்றுலா மையத்துக்கு விவசாயிகள் எதிர்ப்பு

    • சாகச சுற்றுலா மையம் அமைக்கப்பட்டதால் தங்களது விவசாயம் பாதிக்கப்படுவதாகவும், இதனை தடுக்க வேண்டும் எனவும் விவசாயிகள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.
    • 50க்கும் மேற்பட்ட விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். அவர்கள் சாகச சுற்றுலா மையம் அமைக்க தங்கள் எதிர்ப்பை முழுமையாக பதிவு செய்தனர்.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் சர்வதேச சுற்றுலா தலமாக விளங்கி வருகிறது. இங்கு மேலும் சுற்றுலா வளர்ச்சி ஏற்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியான மன்னவனூரில் சாகச சுற்றுலா மையம் அமைக்கப்பட்டது. இதன் மூலம் அந்தரத்தில் கயிறில் செல்லும் சாகச விளை யாட்டு அமைக்கப்பட்டது.

    இது சுற்றுலா பயணிகளிடையே மிகுந்த வரவேற்பை பெற்றது. இதற்காக விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்பட்டது. இந்நிலையில் சாகச சுற்றுலா மையம் அமைக்கப்பட்டதால் தங்களது விவசாயம் பாதிக்கப்படுவதாகவும், இதனை தடுக்க வேண்டும் எனவும் விவசாயிகள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.

    வட்டாட்சியர், கோட்டா ட்சியர் தலைமையில் நடந்த பேச்சுவார்த்தையில் எவ்வித உடன்பாடும் எட்ட ப்படவில்லை. இதனைய டுத்து இன்று மாவட்ட கலெக்டர் தலைமை யில் அமைதி பேச்சுவார்த்தை நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.

    அதன்படி மன்னவனூர், கவுஞ்சி பகுதிகளைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்ட விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். அவர்கள் சாகச சுற்றுலா மையம் அமைக்க தங்கள் எதிர்ப்பை முழுமையாக பதிவு செய்தனர்.

    இதனால் கூட்டத்தில் எந்தவித முடிவும் எட்ட ப்படாமல் அதிகாரிகள் சென்றனர். இதனால் கூட்டத்தில் பரபரப்பான சூழல் ஏற்பட்டது.

    Next Story
    ×